அரசு பள்ளிகளில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2014

அரசு பள்ளிகளில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்


அரசு பள்ளிகளில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் 652 காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்பும் பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பள்ளிக்கல்வித்துறை ஒப்படைத்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்க சற்று காலதாமதம் ஆகும். இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக ரூ.4 ஆயிரம் மாதச்சம்பளத்தில் (தொகுப்பூதியத்தில்) 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை பிறப்பித்துள்ளார்.

அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:-

ரூ.4 ஆயிரம் சம்பளத்தில் ...

கம்ப்யூட்டர் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்து எடுத்து அவர்கள் பணியில் சேரும் வரை ரூ.4 ஆயிரம் தொகுப்பூதிய சம்பளத்தில் தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து தற்காலிகமாக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி