சொற்பொருள்:
* சுழி - உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
* துன்னலர் - பகைவர், அழகிய மலர்
* பரிவாய் - அன்பாய்
* சாடும் - தாக்கும், இழுக்கும்
* ஆடுபரி - ஆடுகின்ற குதிரை
ஆசிரியர் குறிப்பு:
* பெயர்: காளமேகப்புலவர்
* பிறப்பு: கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நந்திகிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்.
* இயற்பெயர்: வரதன்
* பணி: திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தார்.
* வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார்.
* பெயர் காரணம்: கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் காளமேகப்புலவர் என அழைக்கப் பெற்றார்.
* இவர் இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.
கல்விக்கு எல்லை இல்லை
கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண்.
-ஒளவையார்
சொற்பொருள்:
* கைம்மண்ணளவு - ஒரு சாண் எனவும் பொருள் கொளவர்.
* மெத்த - மிகுதியாக
* பந்தயம் - போட்டி
* புலவீர் - புலவர்களே
* கலைமடந்தை - கலைமகள்
ஆசிரியர் குறிப்பு:
* இங்குக் குறிக்கப்படும் ஒளவையார், சங்க கால ஒளவையாருக்கு மிகவும் பிற்பட்டவர்.
* கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.
* புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு.
* தனிப்பாடல்களைக் கற்பதனால், தமிழ்மொழியின் பெருமையையும் புலவர்களின் புலமையையும் சொல்லின்பம் பொருளின்பம் கற்பனைஇன்பம் முதலியவற்றையும் பெறலாம்.
இலக்கணம்: நால்வகைச் சொற்கள்
* பலவகைப்பட்ட பண்புகளைக்கொண்டு பெயர்ச்சொற்கள், வினைச்சொற்களைவிட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன உரிச்சொற்கள்.
* இலக்கணவகைச்சொற்கள் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும்.
* பெயரைக் குறித்து வந்தால் பெயர்ச் சொற்கள் என்று பெயர்.
* ஒரு பொருளின் செயலைக் (இயக்கத்தைக்) குறிப்பதால் இச்சொல் வினைச்சொல்.
* தம்பி + உம் இதில் உள்ள "உம்" என்பது இணைப்புச் சொல்லாக வருகிறது. இதனை இடைச்சொல் என்பர்.
* இடைச்சொல் பெயர்ச் சொற்கள், வினைச் சொற்களைச் சார்ந்து வரும்.
* பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு பெயர்ச் சொற்கள், வினைச் சொற்களை விட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன உரிச்சொற்கள் ஆகும்.
* சொற்களிலுள்ள ஈற்றெழுத்தானது கெட்டுப் பாடா, கேளா, ஆடா, செய்யா, சொல்லா என்று வருவதனை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பர்.
* ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மிகும் வல்லினம்
எ.கா:
* பாடா + குயில் = பாடாக்குயில்
* கேளா + செவி + கேளாச்செவி
* பாடாத, கேளாத, ஆடாத, செய்யாத சொல்லாத என்பன எதிர்மறைப் பொருளில் வருவதால் எதிர்மறைப் பெயரெச்சங்கள் ஆகும்.
வல்லினம் மிகா இடங்கள்:
* வினைச் சொற்கள் பெயரைக் கொண்டு முற்றுப் பெறும். இச்சொற்களைப் பெயரெச்சம் என்பர்.
எ.கா:
* வந்த + குழந்தை = வந்த குழந்தை
* உடைந்த + பலகை = உடைந்த பலகை
* செய்த + தச்சன் = செய்த தச்சன்
* பாடிய + கவிதை = பாடிய கவிதை
* காத்த + சிறுமி = காத்த சிறுமி
* வெடித்த + பஞ்சு = வெடித்த பஞ்சு
* பெயரெச்சச் சொற்கள் முன் வல்லொற்று மிகாது.
வல்லினம் மிகும் இடங்கள்:
* எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களில் பின் மட்டும் வல்லின வருக்கச் சொற்கள் வந்தால் வல்லொற்று மிகும்.
எ.கா:
எட்டு + கால் எட்டுக்கால்
பத்து + பேர் = பத்துப்பேர்
பத்து + சட்டை = பத்துச்சட்டை
பத்து + தோப்பு = பத்துத்தோப்பு
எட்டு + கூடை = எட்டுக்கூடை
எட்டு + தேர் = எட்டுத்தேர்
செய்யுள்: திரிகடுகம் - நல்லாதனார்
தூயவர் செயல்கள்
உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்
சொற்பொருள்:
* உண்பொழுது - உண்ணும்பொழுது
* பெறினும் - பெற்றாலும்
* பால்பற்றி - ஒருபக்கச் சார்பு (நடுநிலைமையில் இருந்து மாறுதல்)
* தோல்வற்றி - தோல்சுருங்கி
* சாயினும் - அழியினும்
* சான்றாண்மை - அறிவு ஒழுக்கங்களில் நிலைத்து நிற்றல்
* குன்றாமை - குறையாது இருத்தல்
* தூஉயம் - தூய்மை உடையோர்
* ஈயும் - அளிக்கும்
* நில்லாமை - நிலையாமை
* நெறி - வழி
* தூய்மை - தூய தன்மை
* மாந்தர் - மக்கள்
* நிறை ஒழுக்கம் - மேலான ஒழுக்கம்
* தேற்றாதான் - கடைப்பிடிக்காதவன்
* வனப்பு - அழகு
* தூறு - புதர்
* வித்து - விதை
ஆசிரியர் குறிப்பு:
* திரிகடுகத்தின் ஆசிரியர் - நல்லாதனார்
* ஊர்: திருவெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரை சேர்ந்தவர்.
* இவரைச் "செறுஅடுதோள் நல்லாதன்" எனப் பாயிரம் குறிப்பிடுவதால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
* செறுஅடுதோள் நல்லாதன்" என பாயிரம் குறிப்பிடுவது யார்? - நல்லாகனார்.
நூல் குறிப்பு:
* திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* நூறு வெண்பாக்களைக் கொண்டது.
* "சுக்கு, மிளகு, திப்பிலி" ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய மருந்துக்கு "திரிகடுகம்" எனப் பெயர்.
* அதுபோன்று திரிகடுகம் என்னும் இந்நூல், மூன்று கருத்துக்களை உள்ளடக்கி மனிதனின் மனமயக்கத்தை நீக்குகிறது.
உரைநடை: காந்தியடிகள் கடிதம்
* 1917 ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களுக்கு ஏற்ற வானம் கடித வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
* பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார்.
* கவி இரவிந்த்ரநாத் தாகூரின் இர்பான இலக்கிய நடையின் உயர்விற்குக் காரணம் ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று, தம்முடைய தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றும் தான்.
* முன்சிராம் பேசும் போது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்பதற்கு காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே.
* மதன்மோகன் மாளவியாவின் ஆங்கில பேச்சு வெள்ளியைப்போல் ஒளிவிட்டாலும், அவரின் தாய்மொழிப் பேச்சு தங்கதிப் போன்று ஒளி வீசுகின்றது.
* தாய்மொழியின் மூலம் நமக்குத் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், இராய்களும் தோன்றியிருப்பார்கள்.
* பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.
* தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்கொண்டால், ஆங்கிலத்தில் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா, இல்லையை என்பதை பற்றி சிந்தனை செய்ய வேண்டியது இல்லை என்கிறார்.
* தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது என்கிறார்.
* ஒருமொழியின் தன்மை மக்களின் தன்மையைப் பொருத்தே அமையும்.
* 1917 ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களுக்கு ஏற்ற வண்ணம் கடித வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
* காந்தியடிகள் குஜராத் மாநிலத்தின் ஆற்றிய உரையைக் குழந்தைகளுக்குக் கூறினார்.
* வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவியின்மீது சீற்றம் கொண்டானாம்.
துணைப்பாடம்: உரியது
* முனிவர் அதிகமாக வெறுப்பவர் - பொய் சொல்வாரை
* முனிவர் பொய் சொல்வார் மனையில் உணவு உண்ண மாட்டார்.
* பெரியவரின் அன்பு, அடக்கம், பணிவு நற்குணங்களைக் கண்டு முனிவர் முகம் மலர்ந்தது.
* மக்கள் முனிவரிடம் அந்தப் பெரி்யவருக்கு நான்கு மக்கள் உண்டு.
* பெரியவரின் நான்கு மகன்களின் பெயர்கள் - நடராஜா, வேல்சாமி, சிவசாமி, கந்தசாமி.
* கந்தசாமி ஒடிவந்து தந்தையையும் முனிவரையும் தொழுது சாமிக்கு என்ன கொண்டு வரட்டும் எனக் கேட்டனான்? - பால், பழம்
* தருமம் செய்த பணம் எனக்கு உரியது.
* என் கருத்தை ஏற்று நடக்கின்றவனே எனக்கு உரிய மகன்.
இறைத்தொண்டு
* தொன்மை மிக்க உலக மொழிகள் எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் - தேவநேயப் பாவாணர்.
இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும்
* ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே - இடுகுறிப்பெயர் ஆகும்.
* காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் காரணப் பெயர்கள் எனப்படும்.
எ.கா: பறவை, வளையல், செங்கல்
* தமிழில் காரணப் பெயர்களே மிகுதியாக உள்ளன.
* பிறமொழிகளில் இடுகுறிப்பெயர்களே மிகுதியாக உள்ளன.
* அனைத்துக்கும் பொகுவாக வரும் இடுகுறிப்பெயர்களை இடுகுறிப்பெயர்களை இடுகுறிப் பொதுப்பெயர் எனக் கூறுவர்.
* மலை, காடு, மாடு இவையெல்லாம் இடுகுறிப் பெயர்கள் ஆகும்.
தென்னை என்னும் சொல் ஒரு காரணமும் இன்றி இடுகுறிப் பெயராய் நின்று, ஒரு பொருளுக்கே (தென்னை மரம்) சிறப்பாய் வருவதால் இடுகுறிச் சிறப்புப் பெயராயிற்று.
* காகம், குயில், புறா, கிளி ஆகிய அனைத்தையும் பறவை என்னும் பொதுச்சொல்லால் அழைக்கிறோம். அதனால், இதனைக் காரணப் பொதுப் பெயர் என்கிறோம்.
* வளையல்போலவே சிலபொருள் வளைந்து வட்டமாக இருக்கும். இருப்பினும் அவையெல்லாம் வளையல் என அழைக்கப்படுவது இல்லை. இருப்பினும் இச்சொல் கையில் அணியும் வளையலை மட்டுமே குறிப்பதால் காரணச் சிறப்புப் பெயர் ஆயிற்று.
* சித்திரை மாதத்தில் பிறந்ததால் சித்திரையான் என அழைக்கப்பட்டான்.
* ஒரு சொற்றொடரிலுள்ள எழுவாய் அதன் பயனிலையோடு திணை, பால், எண் இடங்களில் பொருத்தமாக அமைய வேண்டும்.
* மாரியல்லது காரியம் இல்லை என்பன போன்ற முதுமொழிகளும் சிறப்புகளை நமக்கு உணர்த்துகின்றன.
* சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள் மாமழை போற்றதும் மாமழை போற்றதும் என மழையைப் போற்றி வணங்கித் தம் காப்பியத்தை தொடங்கினார்.
செய்யுள்: திருவாரூர் நான்மணிமாலை
என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோவில்
முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்புஎன்னாம்
புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
மண்சுமந்தார் என்றுருகு வார்.
- குமரகுருபரர்.
சொற்பொருள்
* என்பணிந்த - எலும்பை மாலையாக அணிந்த
* தென்கமலை - தெற்கில் உள்ள திருவாரூர்
* பூங்கோவில் - திருவாரூர் கோவிலின் பெயர்
* புண்ணியனார் - இறைவன்
ஆசிரியர் குறிப்பு:
ஆசிரியர் - குமரகுருபரர்
பெற்றோர் - சண்முகசிகாமணிக் கவிராயர் - சிவகாமசுந்தரி அம்மையார்
ஊர் - திருவைகுண்டம்
இயற்றிய நூல்கள்:
* நீதிநெறிவிளக்கம், முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ், கந்தர்கலி வெண் பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம்.
* காலம் - கி.பி.18ம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
* திருவாரூர் + நான்கு + மணிமாலை = திருவாரூர் நான்மணிமாலை.
* இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நான்மணிமாலை எனப் பொருள்படும். நான்மணிமாலை என்பது தமிழில் வழங்கும் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
* முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆனா மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆனா நாற்பது செய்யுள்களை கொண்டது.
* திருவாரூர் தியாகராசப் பெருமானைப் பற்றிய பெருமைகளை திருவாரூர் நான்மணிலை என்ற நூலின் மூலம் அறிந்து இன்புறலாம்.
* என்பணிந்த தென்கமலை இவ்வடியில் தென்கமலை உணர்த்தும் பொருள் தெற்கில் உள்ள திருவாரூர்.
* மண்சுமந்தார் எனக் குறிப்பிடப்படுபவர் - திருவைகுண்டம்.
* வந்தி என்னும் பெயருடைய கிழவிக்காக மண் சுமந்து பாண்டியனிடம் இறைவன்(சிவபெருமான்) அடிப்பட்டார்.
பிரித்து எழுதுதல்:
* பூங்கோவில் - பூ + கோவில்
* புடைத்தென்னார் - புடைத்து + என்னார்
* என்றுருகுவார் - என்று + உருகுவார்
* என்பணிந்த - என்பு + அணிந்த
சொற்களைச் சொற்றொடரில் அமைத்தல்:
* பணிவு: பெரியோரிடம் நாம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
* கோவில்: தஞ்சைப் பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது.
* அன்பு: பரிசு பெற்ற மகனைத் தாய் அன்புடன் அணைத்துக் கொண்டாள்.
* குயவன் களிமண் கொண்ட மட்பாண்டம் செய்தான்.
மெய்பொருள் கல்வி
கற்பிப்போர் கண்கொடுப் போரே! - அந்தக்
கண்க்காயர் உரையினில் இருசெவி சேரே!
நற்பெயர் எடுத்திட வேண்டும்! - நாளும்
நன்றாகப் படித்தும்நீ முன்னேற வேண்டும்!
- வாணிதாசன்
சொற்பொருள்
பதுமை - உருவம்
மெய்பொருள் - நிலையான பொருள்
கணக்காயர் - ஆசிரியர்.
ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் - எத்திராசலு (எ) அரங்கசாமி
பெயர் - வாணிதாசன்
பிறந்த இடம் - புதுவையை அடுத்த வில்லியனூர்
பெற்றோர் - அரங்க திருக்காமு - துளசியம்மாள்
சிறப்பு:
* "கவிஞரேறு, பாவலர்மணி" என்னும் பட்டங்கள் பெற்றுள்ளார்.
* தழிழகத்தின் "வேர்ட்ஸ் வொர்த்" என இவரைத் தமிழுலகம் புகழ்கிறது.
* உருசியா, ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
* காலம்: 22.07.1915 - 07.08.1974
நூல் குறிப்பு:
* கவிஞர் வாணிதாசன் தமிழ் உலகிற்குப் புனைந்து அளித்துள்ள "குழந்தை இலக்கியம்" என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது "மெய்ப்போருள் கல்வி".
உரைநடை: தூங்கா நகர்
* உலகமே உறங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் விழித்திருக்கும் தூங்கா நகர் - மதுரை
* தென்னிந்தியாவின் ஏதென்ஸ் - மதுரை
* மதுரை - இனிமை
மதுரை நகரின் சிறப்புப் பெயர்கள்:* தூங்கா நகர், திருவிழா நகர், கோவில் நகர், பழம்பெரும் தமிழரின் நாகரீகத தொட்டில், தென்னிந்தியாவின் ஏதென்ஸ், கூடல் நகர், ஆலவாய்
மதுரை - பெயரக்காரணம்:* "மதுரை" என்னும் சொல்லுக்கு "இனிமை" என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. மதுரை பற்றிய புலவர்கள் கூறும் போதெலாம் தமிழோடு சேர்த்தே கூறினார்.
புறநானூறு: தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு போற்றியது.
சிறுபாணாற்றுப்படை: "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை"சிறுபாணாற்றுப்படை (நல்லூர் நத்தத்தனார்)
சிலப்பதிகாரம்:
"ஓங்குசீர் மதுரை"
மதுரை மூதூர் மாநகர்"
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுநீர் மதுரை"
"மாண்புடை மரபின் மதுரை"
"வானவர் உறையும் மதுரை"
"பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்"
தமிழகத்தின் சிறப்பு:
* சேரநாடு - வேழமுடைத்து
* சோழநாடு - சோறுடைத்து
* பாண்டியநாடு - முத்துடைத்து
* தொண்டைநாடு - சான்றோர் உடைத்து
நான்மாடக்கூடல்:* மதுரைக்கு கூடல் எனவும், ஆலவாய் எனவும் வேறு பெயர்கள் உள்ளன.
* நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவி உள்ளது.
* "திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்" ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், நான்மாடக்கூடல்" என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர்.
* கன்னிக்கோவில், கரியமால் கோவில், காளிகோவில், ஆலவாய்க் கோவில் ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்தமையால், "நான்மாடக்கூடல்" என்னும் பெயர் வந்தது என்றும் கூறுவர்.
பரஞ்சோதியார் கூற்று:* வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப் பற்றி இறைவனிடம் * பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாக கூடி மதுரையைக் காத்தமையால் "நான்மாடக்கூடல்" என்னும் பெயர் ஏற்பட்டதாக பரஞ்சோதியார் கூறியுள்ளார்.
அறிஞர்கள் கூற்று:* எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்து கூடும் வளமான நகர் என்பதால், கூடல் எனப் பெயர் பெற்றதாக கூறுவர்.
* சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லோரும் கூடியதால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாக அறிஞர் கூறுவர்.
ஆலவாய் - திருவிளையாடற புராணம் கூற்று:* மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆணையிட்டார். பாம்பு வாழை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல் மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் "திருவிளையாடற்புராணம்" கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை (விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும்.
வேறு காரணம்:* மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் விற்றிருந்ததால் "ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாக கூறுவர்.
மருதை மதிரை:* மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் "ம்ஸ்ருதை" என வழங்கிய இடம், காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் "மதிரை" என்ற பெயர் காணப்படுகிறது.
மதுரை நகரமைப்பு: * மதுரை நகரின் நடுவில் அண்ணல் கோவிலும் அதனைச் சுற்றி முறையாக ஒழுங்குற அமைந்த தெருக்களும் காண்பதற்குத் தாமரைப் பொகுட்டையும் அடுக்கடுக்கான இதழ்களையும் போன்று காட்சியளித்தன. இது அன்றைய தமிழர் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழ்கின்றன.
மதுரை வீதிகளின் பெயர்கள்:* அறுவை வீதி - ஆடைகள் விற்கும் கடைப்பகுதி.
* கூலவீதி - தானியக்கடை
* பொன்வீதி - பொற்கடைகள்
* மன்னவர் வீதி - மன்னர் வாழும் பகுதி
* மறையவர் வீதி - அந்தணர் வீதி
மதுரையின் மாண்பு: * சிவபெருமான் சுந்தரபாண்டியனாகவும் செவ்வேள் உக்கிரகுமாரப்பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாகவும் மதுரையை ஆண்டனர்.
* அரிமர்த்தன பாண்யிடனுக்கு அமைச்சராக மாணிக்கவாசகர் திகழ்ந்தார்.
* திருஞானசம்பந்தர் கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச் சிறையார் உதவியுடன் சைவத்தைக் காத்தார்.
திருமலை நாயக்கரின் திருப்பணிகள்:* திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்.
* கோடை விடுதியான தமுக்கமும், குளிர்பூந்தடாகமாகிய பெரிய தெப்பக் குளமும், கலை நயத்தில் தாஜ்மகாலை" ஒத்த "திருமலை நாயக்கர் மகாலையும் அமைத்து மதுரையை அழகுபடுத்தினார்.
* மதுரையை "விழ மல்கு நகராக" மாற்றினார்.
நிகழ்வுகள்:
* பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம் தருமிக்கு இறைவன் தண்டமிழ்ப் பாடல் தந்தமை பற்றிக் கூறுகிறது.
* மதுரையைச் சூற்றியுள்ள மலைகளில் வாழ்ந்த சமண முனிவர்களால் "நாலடியார்" இயற்றப் பெற்றது.
* குமரகுருபரருக்கு மீனாட்சியம்மையே சிருமியாக வந்து முத்துமணி மாலையைப் பரிசளித்தார்.
நான்காம் தமிழ்ச்சங்கம்:
* வள்ளல் பாண்டித்துரை தேவர், மதுரையின் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தனர்.
* கோவலன் பொட்டல்: சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் "கோவலன் பொட்டல்" என்னும் பெயருடன் இன்றும் அப்பகுதி மக்களிடம் வழங்கப்படுகிறது.
செல்லத்தம்மன் கோவில்:
* கையில் சிலம்புடன் உட்கார்ந்திருக்கும் உருவச்சிலை அமைந்த கோவில், செல்லத்தம்மன் கோவிலாக இன்றும் மக்களால் வழிபடப்படுகிறது.
பொதுவான குறிப்பு:
* மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழமையானது கிழக்குக் கோபுரம்; உயரமானது தெற்குக் கோபுரம். இது 1600.9 அடி உயரமும் 1511 கதை உருவங்களும்.
* மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது நாயக்கர் மகால். இதன் ஒவ்வொரு தூணும் 82 அடி உயரமும் 19 அடி சுற்றளவும் கொண்டது.
* கையிற் சிலம்புடன் உட்கார்ந்திருக்கும் உருவச்சிலை அமைந்த கோவில் செல்லத்தம்மன் கோவிலாக இன்றும் மக்களால் வழிபடப்படுகிறது.
* நல்லந்துவனார், மருதனிள நாகனார், இளந்திருமாறன், சாத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார் முதலியோர் அன்றைய மதுரையில் வாழ்ந்தோராவர்.
This comment has been removed by the author.
ReplyDeletemr.akilan sir, plz case detail update..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே மதிய உணவு சாப்டீங்களா சீக்கிரம் சாப்டுங்க
ReplyDeleteஅப்பதான் வரப்போர மகிழ்ச்சியை கொண்டாட தெம்பு வேணும் ல
என்ன நான் சொல்ரது
இன்னும் கொஞ்ச நேரத்துல கல்வி செய்தி கதறனும்
இன்னைக்கு இரவு TRB WEBSITE திணறனும்
What hapend
DeleteSir????????????????
DeleteIam waiting. £££££££££££££££££
DeleteAkilan sir comments koduka nanga ready theerpu koduka judge readya? List vida trb readya ketu sollunga?
Deleteநண்பர்களே மன்னியுங்கள் வழக்கு 10.12.14 புதன் கிழமை ஒத்தி வைக்கப்பட்டு விட்டது
Deleteஅரசு இன்று வழக்கை முடிக்க முயற்சி எடுத்தது ஆனால் நீதிபதி ஐயா ஒத்தி வைத்து விட்டnர்கள்
Enna nadaka pokuthu.....
ReplyDeleteIntroduce nala erugu but finishing sari ilaye
ReplyDeleteI am waiting, tody news
ReplyDeleteAda poga pa bp eguruthu pls tel enna achu
ReplyDeleteநண்பர்களே மன்னியுங்கள் வழக்கு 10.12.14 புதன் கிழமை ஒத்தி வைக்கப்பட்டு விட்டது
ReplyDeleteஅரசு இன்று வழக்கை முடிக்க முயற்சி எடுத்தது ஆனால் நீதிபதி ஐயா ஒத்தி வைத்து விட்டnர்கள்