பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதியும் தொடங்க உள்ளன.
இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வியாழக்கிழமை வெளியிட்டது.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படிக்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
10-ஆம் வகுப்புத் தேர்வு: 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுத உள்ளனர். காலை 9 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
இந்த மாணவர்களுக்கும் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், விடைத்தாளைப் படித்துப் பார்க்கவும் 15 நிமிஷங்கள் வழங்கப்படுகின்றன. காலை 9.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
முன்கூட்டியே தொடக்கம்: 10-ஆம் வகுப்புத் தேர்வு வழக்கமான தேதியை விட ஒரு வாரம் முன்கூட்டியே தொடங்கி நடைபெற உள்ளது. இதன் மூலம் தேர்வுச் செலவுகளைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஒரே காலத்தில் நடைபெற்றாலும், ஒரே நாளில் இரண்டு தேர்வுகளும் நடைபெறாத வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கியப் பாடங்களுக்கு அதிக விடுமுறை: நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணையில் முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு குறைந்தபட்சம் 3 நாள்கள் முதல் அதிகபட்சம் 7 நாள்கள் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பில் கணிதம், உயிரியல் பிரிவு மாணவர்களுக்கு கணிதப் பாடத்துக்கு 7 நாள்கள் விடுமுறை வருகிறது.
கணிதம், கணினி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கணிதப் பாடத்துக்கு 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக இறுதித் தேர்வுகளில் வரும் கணினி அறிவியல் தேர்வு நிகழாண்டு ஆங்கிலப் பாடத்துக்கு அடுத்ததாக வருகிறது.
எனவே, இந்த மாணவர்களுக்கு கணிதப் பாடத்துக்கான விடுமுறை குறைவாக உள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வில் அதிகபட்சமாக அறிவியல் பாடத்துக்கு 6 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடைத்தாள் பக்கங்கள்: கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுக்கு 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் புத்தகங்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வுக்கு 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் புத்தகங்களும் வழங்கப்பட்டன. நிகழாண்டு விடைத்தாள் புத்தகங்களின் பக்கங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு, விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கை குறைப்பது தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர்களின் கருத்தறியப்படும். அதன்பிறகே, விடைத்தாள் புத்தகப் பக்கங்கள் இறுதிசெய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
பிளஸ் 2 தேர்வு கால அட்டவணை
மார்ச் 5 வியாழக்கிழமை தமிழ் முதல் தாள்
மார்ச் 6 வெள்ளிக்கிழமை தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 9 திங்கள்கிழமை ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 10 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 13 வெள்ளிக்கிழமை தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்
மார்ச் 16 திங்கள்கிழமை வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 18 புதன்கிழமை கணிதம், விலங்கியல், மைக்ரோ- பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயடட்டிக்ஸ்
மார்ச் 20 வெள்ளிக்கிழமை அரசியல் அறிவியல்,
நர்சிங் (பொது), புள்ளியியல், தொழிற்பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு
மார்ச் 23 திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல்
மார்ச் 27 வெள்ளிக்கிழமை இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 31 செவ்வாய்க்கிழமை உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை
மார்ச் 19 வியாழக்கிழமை தமிழ் முதல் தாள்
மார்ச் 24 செவ்வாய்க்கிழமை தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 25 புதன்கிழமை ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26 வியாழக்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 திங்கள்கிழமை கணிதம்
ஏப்ரல் 6 திங்கள்கிழமை அறிவியல்
ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்
இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வியாழக்கிழமை வெளியிட்டது.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படிக்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
10-ஆம் வகுப்புத் தேர்வு: 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுத உள்ளனர். காலை 9 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
இந்த மாணவர்களுக்கும் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், விடைத்தாளைப் படித்துப் பார்க்கவும் 15 நிமிஷங்கள் வழங்கப்படுகின்றன. காலை 9.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
முன்கூட்டியே தொடக்கம்: 10-ஆம் வகுப்புத் தேர்வு வழக்கமான தேதியை விட ஒரு வாரம் முன்கூட்டியே தொடங்கி நடைபெற உள்ளது. இதன் மூலம் தேர்வுச் செலவுகளைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஒரே காலத்தில் நடைபெற்றாலும், ஒரே நாளில் இரண்டு தேர்வுகளும் நடைபெறாத வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கியப் பாடங்களுக்கு அதிக விடுமுறை: நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணையில் முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு குறைந்தபட்சம் 3 நாள்கள் முதல் அதிகபட்சம் 7 நாள்கள் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பில் கணிதம், உயிரியல் பிரிவு மாணவர்களுக்கு கணிதப் பாடத்துக்கு 7 நாள்கள் விடுமுறை வருகிறது.
கணிதம், கணினி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கணிதப் பாடத்துக்கு 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக இறுதித் தேர்வுகளில் வரும் கணினி அறிவியல் தேர்வு நிகழாண்டு ஆங்கிலப் பாடத்துக்கு அடுத்ததாக வருகிறது.
எனவே, இந்த மாணவர்களுக்கு கணிதப் பாடத்துக்கான விடுமுறை குறைவாக உள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வில் அதிகபட்சமாக அறிவியல் பாடத்துக்கு 6 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடைத்தாள் பக்கங்கள்: கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுக்கு 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் புத்தகங்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வுக்கு 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் புத்தகங்களும் வழங்கப்பட்டன. நிகழாண்டு விடைத்தாள் புத்தகங்களின் பக்கங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு, விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கை குறைப்பது தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர்களின் கருத்தறியப்படும். அதன்பிறகே, விடைத்தாள் புத்தகப் பக்கங்கள் இறுதிசெய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
பிளஸ் 2 தேர்வு கால அட்டவணை
மார்ச் 5 வியாழக்கிழமை தமிழ் முதல் தாள்
மார்ச் 6 வெள்ளிக்கிழமை தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 9 திங்கள்கிழமை ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 10 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 13 வெள்ளிக்கிழமை தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்
மார்ச் 16 திங்கள்கிழமை வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 18 புதன்கிழமை கணிதம், விலங்கியல், மைக்ரோ- பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயடட்டிக்ஸ்
மார்ச் 20 வெள்ளிக்கிழமை அரசியல் அறிவியல்,
நர்சிங் (பொது), புள்ளியியல், தொழிற்பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு
மார்ச் 23 திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல்
மார்ச் 27 வெள்ளிக்கிழமை இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 31 செவ்வாய்க்கிழமை உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை
மார்ச் 19 வியாழக்கிழமை தமிழ் முதல் தாள்
மார்ச் 24 செவ்வாய்க்கிழமை தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 25 புதன்கிழமை ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26 வியாழக்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 திங்கள்கிழமை கணிதம்
ஏப்ரல் 6 திங்கள்கிழமை அறிவியல்
ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி