பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசுத் துறைகளில் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2014

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசுத் துறைகளில் பயிற்சி

பட்டப்படிப்பு, மேல்படிப்பு முடித்தவர்களுக்கு அரசுத் துறைகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இது தொடர்பாக அரக்கோணம் தொகுதி அதிமுக உறுப்பினர் ஜி. ஹரி மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின் விவரம்:

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, மேல்படிப்பு, ஆய்வுப்பட்டம் மேற்கொள்ளும் நம் நாட்டு மாணவர்களுக்கு "எம்எச்ஆர்டி பயிற்சி திட்டம் -2014' என்ற பெயரில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், ஆய்வாளர்கள் அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி