'என்' கார்டு விண்ணப்பம் அரசு இணையத்தில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2014

'என்' கார்டு விண்ணப்பம் அரசு இணையத்தில் வெளியீடு

'என் கார்டு' வைத்துள்ளவர், இணையதளம் மூலம், அவற்றின் செல்லத்தக்க காலத்தை நீட்டித்து கொள்ளலாம்' என, அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில், 1.98 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.
இதில், 'என்' கார்டு எனப்படும், எந்த பொருளும் வாங்காத பிரிவின் கீழ், 64 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன.தற்போது, அரிசி, சர்க்கரை விருப்ப, ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டப்பட்டு, செல்லத்தக்க காலம், 2015, டிச., வரை, நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. உள்தாள் ஒட்டும் பணி, வரும், 15ம் தேதி முதல் துவங்குகிறது.இந்நிலையில், 'என்' கார்டு வைத்துள்ளவர்கள், இணையதளம் மூலம் புதுப்பிக்கும் வகையில், அதற்கான முகவரி, தமிழக அரசின், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:'என்' கார்டு வைத்துள்ளவர்கள், பிரத்யேக இணையதளத்திற்கு சென்று, அதில், ரேஷன் கார்டில் உள்ள, எண்ணை பதிவு செய்தால், ஒரு ரசீது கிடைக்கும். அதை, 'பிரின்ட்' எடுத்து, ரேஷன் கார்டில் இணைத்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.நமது நிருபர்

5 comments:

  1. என் இனிய நண்பர்களுக்கு கார்த்திகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Anaithu nanbarhalukkum theeba thirunal vazhthukkal. Inru, namathu vazhvil oli veesum nalaha amayattum

    ReplyDelete
  3. அனைத்து நண்பர்களுக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. Good morning vijayakumar Chennai sir!
    BT teachers how to get two incentives? What are the courses they have to Study? What are the eligible courses? Please friends anyone clarify me!

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே மதிய உணவு சாப்டீங்களா சீக்கிரம் சாப்டுங்க

    அப்பதான் வரப்போர மகிழ்ச்சியை கொண்டாட தெம்பு வேணும் ல

    என்ன நான் சொல்ரது

    இன்னும் கொஞ்ச நேரத்துல கல்வி செய்தி கதறனும்

    இன்னைக்கு இரவு TRB WEBSITE திணறனும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி