வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்: சந்தீப் சக்சேனா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்: சந்தீப் சக்சேனா

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விண்ணப்பித்துள்ள அனைத்துப் பெயர்களும் கணினியில் சேர்க்கப்பட்டு, அவற்றைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 86 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் நிறைவடைந்து, இன்னும் 2 வாரங்களில் பெயர் சேர்ப்பு, திருத்தம் தொடர்பான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடுவர். எனவே, திட்டமிட்டபடி ஜனவரி 5-ஆம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தொடர்ந்து சேர்க்கலாம்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டதுடன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி முடிந்து விடாது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது மிகவும் நல்லது.

தற்போது நடந்து முடிந்த திருத்தப் பணியில் 20 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை அச்சிடும் பணி நடைபெறுகிறது. அச்சிடப்பட்டதும், சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர் நேரடியாக வந்து அந்த அட்டைகளை வழங்குவார்கள்.

ஏற்கெனவே கருப்பு-வெள்ளை நிறத்தில் உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளைத் தொலைத்தவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலித்து, வண்ண அட்டைகளை வழங்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும், அடுத்த கட்டமாக அனைவருக்குமே அடுத்த ஆண்டுக்குள் வண்ண அடையாள அட்டைகளை வழங்கி விடலாமா என்றும் யோசித்து வருகிறோம்.

தமிழகத்தில் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்ட விவரங்களைக் கேட்டு இந்தியத் தேர்தல் ஆணையம் எனக்கு கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அதற்கும் வாக்காளர் அடையாள அட்டைக்குமான தொடர்பு குறித்து உடனே பதில் கூற முடியவில்லை என்றார் சந்தீப் சக்சேனா.

1 comment:

  1. தினம் தினம் ஏமாற்றம், நிலைத்து போய்விடுமோ இந்த தடுமாற்றம் என முடக்கப்பட்டு கிடக்கும் தலித் நாங்கள்,,, ( ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகான இடைநிலை ஆசிரியர் ேதர்வு பட்டியலுக்காக ஏங்கும் தலித் ), எங்களின் நலனில் அக்கறை கொள்ள உருவான தனி துறைகள். தன்னிச்சையான அதிகார மையங்கள், தனி அமைச்சர், இதையெல்லாம் தவிர நாங்கள் சமுக நலனில் அக்கறை கொண்டவர்கள், தலித் மக்களின் முன்னேற்றமே எங்களின் குரல் என்றல்லாம் கூறும் தலைவர்கள் இவர்களுக்கெல்லாம் நாங்கள் முடக்கப்பட்டு கிடப்பது இவ்வளவு வெளிப்படையாக தெரிந்தும் எங்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்,,,,,,,,, நாங்கள் இவ்வாறு முடக்கப்படுவது ஏன்,,,,,, இது இன்னும் எத்தனை நாள்தான் நீடிக்கும்,,,,,,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி