குரூப் - 1 தேர்வு தேதி: ஜன., இறுதியில் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2015

குரூப் - 1 தேர்வு தேதி: ஜன., இறுதியில் அறிவிப்பு

''குரூப் - 1 தேர்வு குறித்த அறிவிப்பு, ஜனவரி இறுதியில் வெளியாகும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள, 2,760 குரூப் - 2 ஏ பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நேற்று சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. ரேங்க் அடிப்படையில், முதல் 10 இடங்களை பிடித்த விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியன், ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

அப்போது, அவர் கூறியதாவது:


இந்த முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, ஜன., 23ம் தேதி வரை நடக்கும். இதில், நாள் ஒன்றிற்கு, 200 பேர் என, 2,200 பேர் அழைக்கப்படுவர். மீதமுள்ளவர்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். ஜன., 27ம் தேதி முதல், கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., பணிக்கான கலந்தாய்வு நடக்கும். ஏற்கனவே நடந்த குரூப் - 1 தேர்வு முடிவுகள், 15 நாட்களில் வெளியாகும். ஜனவரி இறுதியில், 2015க்கான ஆண்டு திட்டம் வெளியிடப்படும். அதே காலகட்டத்தில், குரூப் - 1 தேர்வு தேதியும் அறிவிக்கப்படும். தற்போதுள்ள சூழலில், குரூப் - 1 தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்படும் துணை கலெக்டர் மற்றும் காவல் துறை டி.எஸ்.பி., பணியிடங்கள், அதிகளவில் காலியாக உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி