ஜனவரி 19, 20ம் தேதிகளில் தொழில் சார்நிலை உதவிப் பொறியாளர் பணிக்கான நேர்காணல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2015

ஜனவரி 19, 20ம் தேதிகளில் தொழில் சார்நிலை உதவிப் பொறியாளர் பணிக்கான நேர்காணல்


தமிழ்நாடு தொழில் சார்நிலை உதவிப் பொறியாளர் பணிக்கான நேர்காணல், வரும் 19, 20ம் தேதிகளில் நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணியில், உதவிப் பொறியாளர் (தொழில்கள்) பதவிக்கு, 40 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான கணினி வழி எழுத்து தேர்வு, ஜூன் 19ல் நடந்தது.இதில், 4,279 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி உள்ளிட்ட, அறிவிக்கப்பட்ட பல்வேறு விதிளின் படி, 200 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 82 பேர், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதுபற்றிய விவரங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இதற்கான நேர்காணல், ஜன., 19, 20ம் தேதிகளில், தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும். இவ்வாறு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி