வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2015

வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு


நாளை முதல் 24ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாளை முதல் நடைபெற இருந்த 4 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் போராட்டம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் கூறினார். மும்பையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இம்முடிவை எடுத்துள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 4 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி