நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இணையம் மூலம், திருவள்ளுவர் கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என, மத்திய மனிதவள துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.அவர், டில்லியில், பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் எழுதிய, 'திருவள்ளுவர்' புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:
தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாழ்க்கை மற்றும் அவரது ஒப்பற்ற படைப்பான, திருக்குறள் குறித்து, அனைத்து மாணவர்களும் அறிய வேண்டியது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு, இம்மாத மத்தியில், திருவள்ளுவர் பற்றி, இணையம் மூலம் கட்டுரைப் போட்டி நடத்த, சி.பி.எஸ்.இ., அமைப்பை, மத்திய அரசு கோரியுள்ளது. நாடு முழுவதும், 22 மொழிகளில், இப்போட்டி நடத்தப்படும். புதிய கல்விக் கொள்கைகுறித்து, அனைத்து மாநிலங்களிடமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் அவற்றுக்கே உரிய கலாசார, பாரம்பரிய பெருமைகளுடன் சிறந்து விளங்குகின்றன; அதை நாம் கொண்டாட வேண்டும். அந்த வகையில், புதிய கல்விக் கொள்கை அறிமுகமாகும் போது, திருவள்ளுவரின் திருக்குறள், தேசிய பாடத் திட்டத்தில் இடம் பெறும் என, நம்புகிறேன்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி