மருத்துவ மேற்படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி நடக்கிறது.595 இடங்களுக்கு, 9,700 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில், 12அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்புகள் என, பல மருத்துவ மேற்படிப்பு கள் உள்ளன.
இதில், 1,100 இடங்களும், எம்.டி.எஸ்., படிப்புக்கு, 40 இடங்களும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக, மீதமுள்ள 595 இடங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கப்பட உள்ளனர். எம்.டி., -எம்.எஸ்., படிப்புகளுக்கு, 8,600 பேர்; எம்.டி.எஸ்., படிப்புக்கு, 1,157 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், ''மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி, சென்னையில் ஐந்து மையங்களில் நடக்கிறது. ''மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங் களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்,'' என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி