பிளஸ் 2 செய்முறை தேர்வு: 6 லட்சம் பேர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2015

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 6 லட்சம் பேர் பங்கேற்பு

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வு நேற்று துவங்கியது. தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, அடுத்த மாதம் 5ம் தேதி துவங்குகிறது. இந்த ஆண்டு இத்தேர்வை, தனித்தேர்வர்களையும் சேர்த்து, 10 லட்சம் பேர் எழுதுவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் தொடர்பான செய்முறைத் தேர்வு, நேற்று துவங்கியது. இதில், தமிழகம் முழுவதும், ஆறு லட்சம் மாணவர் பங்கேற்கின்றனர். சென்னையில், 229 மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும், 3,000 மையங்களில் செய்முறைத் தேர்வு நடக்கிறது. இதற்கு, தேர்வுத் துறை சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னதாக, அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற தனித்தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கும், தற்போது செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி