மத்திய பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2015

மத்திய பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள்


2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


  1. 12.20 PM: வருமான வரி கட்டுபவர்களுக்கு ரூ.4,44,200 வரிச்சலுகைகிடைக்கும்.

    12.18 PM:கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் கருப்புப் பண பதுக்கலில் ஈடுபடுவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்படும்.

    12.15PM:மருத்துவ காப்பீடு வரி சலுகைக்கான வரம்பு ரூ.15,000த்தில் இருந்து ரூ.25,000 அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு ருத்துவ காப்பீடு வரி சலுகைக்கான வரம்பு ரூ.30,000 ஆகவும்,மிகவும் மூத்த குடிமக்களுக்கு மொத்த செலவில் இருந்து ரூ.30,000 கழித்துக்கொள்ளப்படும்.

    12.10 AM: தூய்மை இந்தியா, தூய்மை கங்கா திட்டத்துக்கு நிதியளிப்பவர்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.

    12.09 AM: சேவை வரி 14% ஆக அதிகரிப்பு.

    12.08 PM:2013-14 நிதியாண்டில் திரட்டப்பட்ட சொத்து வரி ரூ.1008 கோடி. வரும் நிதியாண்டில் சொத்து வரிக்கு பதிலாக 'சூப்பர்-ரிச் வரி'அமல் படுத்தப்படுகிறது. ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்க்ள் இந்த வரியை செலுத்த வேண்டியிருக்கும்.

    12.06 PM:அயல்நாட்டுச் சொத்துகளுக்கான வருமான வரியை தாக்கல் செய்யாதவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

    12.05 PM:கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.

    12.04 PM: வரி விபரம்:கார்ப்பரேட் வரி தற்போது 30% ஆக உள்ளது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் 25% ஆக குறைக்கப்படும்.


    11.55 AM: பட்ஜெட் மதிப்பீடு:
  2. 1.திட்டமிடப்படாத செலவினங்கள்- ரூ.13,12,200 கோடி
  3. 2.திட்டமிடப்பட்ட செலவினங்கள்- ரூ.4,65,277 கோடி
  4. 3.நடப்புப் பற்றாக்குறை- ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் 3.9%

  5. 11. 49 AM:கல்வித் துறை:கர்நாடகாவில் ஐ.ஐ.டி. அமைக்கப்படும்.

    11.48 AM: கல்வித் துறை:ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப்பிரதேசத்தில் ஐ.ஐ.எம். அமைக்கப்படும். அருணாச்சலப்பிரதேசத்தில் (Centre for Film Production and Animation ) திரைப்படத் தயாரிப்பு, அனிமேஷன் சார்ந்த கல்வி மையம் அமைக்கப்படும்.

    11.45 AM: ராணுவத்துக்கு ரூ.2.47 லட்சம் கோடி ஒதுக்கீடு.

    11.43 AM: கல்வித் துறைக்கு ரூ.68,968 கோடி ஒதுக்கீடு.

    11.40 AM:டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி செய்து தரப்படும்.

    11.36 AM: தமிழகம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும். பிஹாரில் எய்ம்ஸ்-க்கு நிகரான மையம் அமைக்கப்படும்.

    11.35 AM: நிர்பயா நிதிக்கு மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
    11.33 AM:மூத்த குடிமக்கள் நலனைப் பேண பி.எஃப் திட்டத்தில் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ.9000 கோடி நிதி பயன்படுத்தப்படும். 'மூத்த குடிமக்கள் சேமநல நிதி' என்ற பெயரில் இது நிர்வகிக்கப்படும்.

11.32 AM:கிராமப்புற உட்கட்டுமானத்தை மேம்படுத்தும் வகையில் 2015-16 நிதியாண்டுக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கப்படும்.

11.31 AM:வறுமைக் கோட்டுக் கீழ் இருக்கு முதியோர்கள் அடையாளம் காணப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

11.30 AM:பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு ரூ.1 பிரிமீயம் தொகை செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான காப்பீட்டை பெற முடியும்.

11.28 AM:ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் விபத்து காப்பீட்டுத் திட்டம் அறிமுகம். ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே பிரிமீயம்.

11.28 AM:நடப்பு கணக்கு பற்றாக்குறையை 3%-துக்கு கொண்டு வரும் இலக்கு இரண்டு ஆண்டுகளில் எட்டப்படும்.

11.27 AM: அரசு கொண்டுவரவுள்ள 2 சீர்திருத்தங்கள்:
1.(ஜி.எஸ்.டி.) சரக்கு, சேவை வரி அமலுக்கு கொண்டு வரப்படும்.
2.நேரடி மானியத் திட்டத்தில் பயனாளர்கள் பலனடையும் வகையில் ஜன் தன் திட்டம், ஆதார் திட்டத்தை பயனாளர்கள் மொபைல் எண்ணுடன் ஒருங்கிணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

11.26 AM: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தப்படும். (MNREGA) தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.34,699 கோடி ஒதுக்கப்படுகிறது.

11.25 AM:தொழில் முனைவோருக்கு சிறு, குறு அளவில் கடன் வழங்கும் வகையில் முத்ரா வங்கிகள் உருவாக்கப்படும். அதற்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும்.

11.24 AM:விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நபார்டு வங்கிக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

11.23 AM:ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்.

11.22 AM:அரசு எதிர் கொண்டுள்ள சவால்கள் |வாசிக்க -மத்திய அரசின் ஐம்பெரும் சவால்கள்: ஜேட்லி தகவல்|
1.விவசாயத் துறை வருமானத்தை பெருக்குவது மிகப் பெரிய சவாலாக உள்ளது
2.கட்டுமானத் துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்
3.உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் இதை ஈடுகட்டவே வகுக்கப்பட்டுள்ளது.
4.நடப்பு கணக்கு பற்றாக்குறையை சீரமைக்க வேண்டும்.
5. அதிக அளவில் நிதி முதலீட்டை ஈர்க்க கூடுதலான கவனம் செலுத்தப்படும்.

11.12 AM: வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டும்.

11.11 AM:2022-ல் அனைவருக்கும் வீடு திட்டம் இலக்கை எட்டும். கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும், நகர்ப்புறங்களில் 5 கோடி வீடுகளும் அமைக்கப்படும்.

11.10 AM:2015-16 நிதி ஆண்டுக்கான ஜிடிபி இலக்கு 8 முதல் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு இலக்க ஜிடிபி அடைய வேண்டும் என்பதேஎதிர்காலத் திட்டம்.

11.08 AM:அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

11.06 AM: அரசின் 3 சாதனைகள் |வாசிக்க -மோடி அரசின் 3 சாதனைகள்: பட்ஜெட்டில் ஜேட்லி பட்டியல்|
1.ஜன் தன் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 12.5 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
2.நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள மாநிலங்கள் பயனடையும் வகையில் ஏல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
3.தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-15ல் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.இந்த நிதியாண்டில்நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.

11.05 AM:பொருளாதார வளர்ச்சியல் ஊக்குவிக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும்.

11.04 AM:நடப்பு கணக்குப் பற்றாக்குறை 1% கீழ் குறையும்: ஜேட்லி நம்பிக்கை.

11.04 AM:மொத்த பண வீக்கம், நடப்பு கணக்குப் பற்றாக்குறை குறைந்துள்ளது.

11.03 AM:இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

11.01 AM:இந்தியப் பொருளாதரத்தின் நம்பகத்தனமை உலக அரங்கில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

11.00 AM:மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
10.43 AM:வர்த்தக துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 262.33 புள்ளிகள் உயர்ந்து 29,482.45 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 74.65 புள்ளிகள் உயர்ந்து 8,919.25 புள்ளிகளாக இருந்தது. பட்ஜெட் எதிர்பார்ப்பு: சென்செக்ஸ் 262 புள்ளிகள் அதிகரிப்பு

10.42 AM:பட்ஜெட் எதிர்பார்ப்பு இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இன்று காலை பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.

10.40 AM:வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்படுமா என்பது நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி