தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: உரிமையியல் நீதிபதி பதவியில் (2013-14ம் ஆண்டுக்கான) காலியாக உள்ள 162 பணியிடத்தை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 1, 2ம் தேதி நடந்தது.
மேற்படி பதவிக்கான விண்ணப்பதாரர்கள் இணையதள வழியிலான விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங் களை சரிபார்க்கும் பொருட்டும்,விவரங்கள் உண்மை தன்மையினை அறியும் பொருட்டும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு 590 விண்ணப்பதாரர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 4ம் தேதி முதல் 6ம் தேதி வரையும், 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமையகத்தில் நடைபெறும்.விண்ணப்பதாரருக்கான அழைப்பு கடிதம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது. அழைப்பு கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி