24இல் குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க பள்ளிகளுக்கு விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2015

24இல் குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க பள்ளிகளுக்கு விடுமுறை


குழித்துறை மறைமாவட்ட உதயவிழாவான பிப். 24ஆம் தேதி கோட்டாறு, குழித்துறைமறைமாவட்டங்களுக்கு சொந்தமான அனைத்து கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மறைமாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு பணிக்குழுத் தலைவர் அருள்பணி டேவிட் மைக்கேல் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

குழித்துறை மறைமாவட்ட உதயவிழா மற்றும் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் திருநிலைப்பாடுவிழா பிப். 24ஆம் தேதி சித்திரங்கோடு டிரினிட்டி பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.இவ்விழாவில், தமிழகம் மற்றும் பிற மாநில ஆயர்கள் முன்னிலையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், குழித்துறை மறை மாவட்ட புதிய ஆயராக ஜெரோம்தாஸ் வறுவேலை திருநிலைப்படுத்துகிறார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சிகளில் குமரி மாவட்ட மக்கள் பங்கேற்கும் பொருட்டு கோட்டாறு மற்றும் குழித்துறை மறைமாவட்டங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கும் அன்றைய தினம் (பிப். 24) விடுமுறை வழங்கப்படுகிறது.இதற்கு ஈடாக மார்ச் 7ஆம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவனங்கள் இயங்கும். இதற்கான அனுமதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழங்கியுள்ளார்.விழாவுக்கு தக்கலையில் இருந்து அரண்மனை சாலை வழியாக வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் கொற்றிகோடு காவல்நிலையம் அருகே நிறுத்த மைதானம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

வேர்கிளம்பி வழியாக வரும் வாகனங்கள் மணலிக்கரை பள்ளி மைதானம், ஆலயவளாகம் மருத்துவமனை ஆகிய இடங்களில் நிறுத்தலாம்.குலசேகரம் மற்றும் சுருளோடு வழியாக வரும் வாகனங்கள் காயல்கரை கல்குவாரியில் நிறுத்தப்படும். இப்பகுதிகளில் இருந்து விழா திடலுக்கு சிறப்பு வாகனங்கள் இயக்கப்படும். முக்கிய பிரமுகர்களின் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்படுகிறது என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி