ஊரக வேலை உறுதி திட்டப் பணிக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2015

ஊரக வேலை உறுதி திட்டப் பணிக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு


ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் உதவியாக தமிழகத்துக்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்தத் திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் உதவியாக தமிழகத்துக்கு 4 தவணைகளில், மொத்தம் ரூ.2,781.80 கோடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நான்காவது காலாண்டுக்கான தவணையாக மத்திய அரசிலிருந்து ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.100 கோடி 12-வது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான பட்டியல் இனத்தவருக்கான திட்டங்களுக்கும், தேசியத் திட்டங்களுக்கு ரூ.5 கோடியும், மாநிலத் திட்டங்கள் உள்ளிட்ட மற்ற திட்டங்களுக்கு ரூ.395 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி