புதுடில்லி: ''டிஜிட்டல் இந்தியா திட்டம் முலம் நாட்டில் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்,'' என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அவர், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மேலும் கூறியதாவது:தகவல் தொழில்நுட்பத் துறை 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. அறிவுசார் பொருளாதார நாடாக மாற்றும் நோக்கில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.
மக்கள் மிகச் சுலபமாக தொழில்நுட்ப அடிப்படை கட்டமைப்பு மற்றும் அரசு சேவைகளை பெற வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். குக்கிராமங்களிலும் கணினி, தொலைதொடர்பு வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்புகள் பெருகும். இந்தியாவில் முதலீடு செய்ய நான்காயிரம் பேர் முன்வந்துள்ளனர். அவர்களில் அமெரிக்கா வின் தகவல் தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் உருவாக்கும் செயல்திட்டங்களால் வெளிநாட்டு நிறுவனங்கள் கொழிக்கின்றன. அவர்கள் பேஸ்புக்,கூகுள் போன்ற கண்டுபிடிப்புகளை இந்தியாவில் உருவாக்க துணை புரிவார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி