தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்மாநில, மாவட்ட நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2015

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்மாநில, மாவட்ட நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு


தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இன்று (23.02.2015) மதிப்புமிகு. பள்ளி கல்வித் துறை செயலர், இயக்குநர், SSA மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் ஆகியோர்களை மாநிலத் தலைவர் கே.சம்பத் தலைமையில் சந்தித்து, கோரிக்கைகளை அளித்தனர்.
மாநிலப் பொதுச்செயலாளர் ஜெ.ரவி , மாநிலப் பொருளாளர் கி.கார்த்திகேசன், மாநில இணைச் செயலாளர் அ.பாலாஜி, மாநில செற்குழு உறுப்பினர் சி.ஜான்கென்னடி, சென்னை மாவட்ட தலைவர் சி.முருகன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் D.மீகாவேல், திருவள்ளூர் மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.இராமசாமி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரும் உடன் இருந்தனர். கடமையை செவ்வனே ஆற்றி, விதிகளுக்குட்பட்டு உரிமைகளுக்கு போராடும், ஆசிரியர்பயிற்றுநர்களின் நலனுக்காக செயல்படும் நமது சங்கத்தின் கோரிக்கைகளுக்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

1 comment:

  1. ஏற்கப்பட்ட கோரிக்கைகளுக்கு
    ‘www.tntamilkalvi.blogspot.in’ பார்க்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி