அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடு களில் வெளிநாட்டு மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டுமா னால் ‘டோஃபல்’ எனப்படும் ஆங்கில மொழித் திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆங்கிலத் தில் பேசுதல், எழுதுதல், வாசித்தல், கவனித்தல் ஆகியவற்றை சோதிக் கும் விதமாக இந்த தேர்வுஅமைந் திருக்கும். எஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீசஸ் (இ.டி.எஸ்.) என்ற அமைப்புஇந்த தேர்வை நடத்துகிறது. இந்தியாவில் டோஃபல் தேர்வில் சாதனை படைக் கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.2014 டோஃபல் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட் டது. இதில் சென்னையைச் சேர்ந்த அனூப், பத்மபிரியா உட்பட 10பேர் அதில் இடம்பெற்றனர்.
ஆங்கில மொழித் திறன், பள்ளி தேர்வில் பெற்ற மதிப்பெண், தலைமைப் பண்பு, இதர துறைகளில் செய்த சாதனை கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் சிறந்த மாணவர்களாக தேர்வுசெய்யப்பட்டனர். தலா 7 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 34 ஆயிரம்) வீதம் 70 ஆயிரம் டாலர் (ரூ.43.40லட்சம்) கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. அமெரிக்க துணை தூதர் பிலிப்-மின் இந்த உதவித்தொகையை வழங்கினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி