- தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் வருகிற 10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டம், அரூர் தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத் தேர்த்திருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.இத்திருவிழாவில் அந்தப் பகுதி மக்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய தினம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் மார்ச் 28-ஆம்தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.மேலும், உள்ளூர் விடுமுறை நாளன்று அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கருதிசார் நிலைக் கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்டப் பணியாளர்களோடு செயல்படும் என்றார்.
Mar 7, 2015
அரூரில் மார்ச் 10-இல் உள்ளூர் விடுமுறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி