குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கும் முகாம்: மார்ச் 23-ல் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2015

குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கும் முகாம்: மார்ச் 23-ல் தொடக்கம்


சென்னை மாநகராட்சி சார்பில் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ திரவ மருந்து வழங்கும் முகாம் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைவால்ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாம் சென்னை மாவட்ட குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து நகர நலவாழ்வு மையங்கள், பதினேழு 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்கள் ஆகியவற்றில் மார்ச் 23-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை (25-ம் தேதி நீங்கலாக) 4 நாட்கள் நடைபெறும்.

இந்நாட்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வைட்டமின் ஏ திரவ மருந்து வாய் வழியாக விட்டுச் செல்லலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி