பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கான முதற்கட்ட பணி, நேற்று துவங்கியது. சென்னை உட்பட, தமிழகம் முழுவதும், 73 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி, நாளை துவங்குகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த 5ம் தேதி துவங்கியது; வரும் 31ம் தேதி முடிகிறது. சென்னையில், நான்கு உட்பட, மாநிலம் முழுவதும், 73 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்க உள்ளது. விடைத்தாள்களின் ரகசியம் கருதி, மையங்களின் விவரம் வெளியிடப்படவில்லை. முதற்கட்டமாக, போலீஸ் பாதுகாப்புடன், விடைத்தாள் கட்டுகள், நேற்று பிரிக்கப்பட்டன. அந்தந்த மண்டல பொறுப்பு கல்வி அதிகாரிகள், முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், விடைத்தாள் கட்டுகளை, தேர்வு மையத்தில் இருந்து வந்த பட்டியலின் படி, சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர்.
இன்றும், விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு மற்றும் சரிபார்ப்பு பணி நடக்கும். நாளை, தமிழ் முதல் தாள் திருத்தும் பணி துவங்குகிறது. நாளை மறுநாள், தமிழ் இரண்டாம் தாள்; அதன்பின், ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. இதற்கான பட்டியலை தேர்வுத் துறை இயக்ககம் தயார் செய்து, ஆசிரியர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. முறைகேடுகளை தடுக்க, ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த 5ம் தேதி துவங்கியது; வரும் 31ம் தேதி முடிகிறது. சென்னையில், நான்கு உட்பட, மாநிலம் முழுவதும், 73 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்க உள்ளது. விடைத்தாள்களின் ரகசியம் கருதி, மையங்களின் விவரம் வெளியிடப்படவில்லை. முதற்கட்டமாக, போலீஸ் பாதுகாப்புடன், விடைத்தாள் கட்டுகள், நேற்று பிரிக்கப்பட்டன. அந்தந்த மண்டல பொறுப்பு கல்வி அதிகாரிகள், முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், விடைத்தாள் கட்டுகளை, தேர்வு மையத்தில் இருந்து வந்த பட்டியலின் படி, சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர்.
இன்றும், விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு மற்றும் சரிபார்ப்பு பணி நடக்கும். நாளை, தமிழ் முதல் தாள் திருத்தும் பணி துவங்குகிறது. நாளை மறுநாள், தமிழ் இரண்டாம் தாள்; அதன்பின், ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. இதற்கான பட்டியலை தேர்வுத் துறை இயக்ககம் தயார் செய்து, ஆசிரியர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. முறைகேடுகளை தடுக்க, ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி