பிளஸ் 2 தேர்வு : கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2015

பிளஸ் 2 தேர்வு : கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் பிளஸ் 2 தேர்வும் முடியும் வரை கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை என கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப். 1 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து கோயிலில் 48 நாட்களுக்கு மண்டகப்படிதாரர்கள், கிராம மக்கள்சார்பில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கொத்தமங்கலத்தில் பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு முடியும் வரை கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை எனகிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால் தற்போது தினமும் கோயிலில் சிறப்பு வழிபாடு மட்டுமே நடைபெறுகிறது.கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. கிராமத்தினரின் இத்தகைய முடிவால் மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கிராமத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி