ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச மாதிரி நேர்முகத்தேர்வு: தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2015

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச மாதிரி நேர்முகத்தேர்வு: தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு


ஐஏஎஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களுக்கு இலவசமாக மாதிரி நேர்முகத்தேர்வு நடத்த தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியான பிறகு, சென்னையில் தமிழக அரசு நடத்தி வரும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் மாதிரி நேர்முகத்தேர்வு (மாக் இண்டர்வியூ) நடத்தப்படும்.மெயின் தேர்வு முடிவு வெளியான அடுத்த 2 நாட்களில் இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில் (காஞ்சி வளாகம்) உள்ள மேற்கண்ட பயிற்சி மையத்தில் இதைப் பெற்றுக்கொள்ளலாம்.

யார் யார் சேரலாம்?

அரசு மையத்திலோ, இதர பயிற்சி மையங்களிலோ அல்லது சுயமாகவோ மெயின் தேர்வுக்குப் படித்து தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் இப்பயிற்சி பெறுவதற்கு தகுதியுடைவர் ஆவர். தகுதியான நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி 3 பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.யுபிஎஸ்சி நேர்முகத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த மாதிரி நேர்முகத்தேர்வினை மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நிபுணர்கள் நடத்துவர். இதில் பங்குபெறும் மாணவர்களுக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சலுகை கட்டணத்தில் 10 நாட்கள் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்படும். அதோடு, செலவுக்காக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.மாதிரி நேர்முகத்தேர்வு நாள் விவரம் தொடர்பான தகவல்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் மெயின் தேர்வு முடிவு வெளியானதும் வெளியிடப்படும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-24621475 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி