இலவச பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படுகிறது; பள்ளி கல்வித்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2015

இலவச பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படுகிறது; பள்ளி கல்வித்துறை முடிவு


தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்பட 14 வகையான கல்வி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் முதல் நாள் அன்று விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் முதல் முறையாக விடுமுறைக்கு முன்பே இந்த விலையில்லா பாட புத்தகங்களை வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அதன்படி, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூட கோடை விடுமுறைக்கு முன்பே பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி