அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எங்கள் சங்க உறுப்பினர்கள் சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் குறு அங்கன்வாடி பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு பதவி உயர்வு என்பது இல்லை. தற்போது, அங்கன்வாடி பணியாளர்களுக்கான பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறு அங்கன்வாடி பணியாளர்களாக பணியாற்றி வரும் எங்களை, காலியாக உள்ள பிரதான அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், வயது வரம்பு, வசிப்பிட தூரம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் எங்களை பணியமர்த்தவும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை பிரதான அங்கன்வாடி பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் பிரதான அங்கன்வாடி பணியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்பத் தடை விதித்தது.
இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 17 ஆயிரத்து 150 அங்கன்வாடிப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்க வேண்டும். மேலும், 3,000 காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதாகவும், மீதிப் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கவும் பதில் மனுவில் கோரப்பட்டது.
மேலும், வயது வரம்பு, வசிப்பிடத் தொலைவு போன்ற நிபந்தனைகளை தளர்த்தி அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அங்கன்வாடி பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களின் 3,000 பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும். தவிர, தற்போது குறு அங்கன்வாடி பணியாளர்களாக உள்ளவர்களும், அங்கன்வாடி பணியாளர்கள் நேரடித் தேர்வில் பங்கேற்கலாம் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்
ReplyDeleteஅனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...
தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2013 ம் ஆண்டுதான் சுமார் 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடநலப்பள்ளிகளிலும் சுமார் 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கள்ளர் நலப்பள்ளிகளிலும் அந்தந்த சமூகத்தினற்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் வேறு சமூகத்தினை சார்ந்த ஒரு சில சுயநலவாதிகள் நம்முடைய உரிமையை பறிக்க வழக்கு தொடர்ந்து நமக்கான உரிமையை பெற விடாமல் தடுத்து வைத்து உள்ளனர். இந்த வழக்கினை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியமும் நலத்துறையும் நமக்கான உரிமையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையாக உள்ளது. இதனால் நாமும் கடந்த ஆறு மாதமாக அமைதியான முறையில் நமது கோரிக்கையை மனுவாகவும் உண்ணாவிரத போராட்டம் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் நமது உரிமையை பெற இயலவில்லை. இது அரசுக்கு நமது மீதும் நலத்துறை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது. ஆனால் இதே நாளில் வெளியான பள்ளிகல்வித்துறை பணியிடங்கலினை மட்டும் நிரப்பியுள்ளனர். அதற்கும் வழக்கு தொடரப்பட்ட போது அரசு உடனடியாக வழக்கினை முடித்து பணியமர்த்தினர்.ஆனால் நமது வழக்கினை கண்டுகொள்ளவில்லை என்பது அரசின் நிலைப்பாடு சந்தேகப்படவைக்கிறது. ஆகையால் தோழர்களே விழித்தெழுங்கள் காலம்கடந்து செல்லும்முன் உரிமையை பெற ஒன்று கூடுங்கள். அலட்சியம் நம்மளை படும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பது உண்மை. தோழர்களே வரும் திங்கள் (23.03.2014) முதல் நமது உரிமையை பெற தொடர் போராட்டம் செய்வோம் அனைவரும் சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் ஒன்று கூடுங்கள் .... நமது உரிமையை பெற்று தரும்வரை போராட்டம் நடத்துவோம்.. அனைவரும் ஆதரவும் தங்களின் பங்களிப்பும் வழங்க வேண்டும். இந்த போராட்டம் நமது இறுதி கட்ட முயற்சி வெற்றி பெறாமல் திரும்புவது இல்லை என்ற முடிவோடு வாருங்கள்.அரசு வழக்கறிஞர் ஆஜராகி நமது உரிமையை நிலைநாட்ட கோரிக்கை விடுப்போம். அரசு நமக்காக அறிவித்த பணியிடங்களை நமக்கு அளிக்க அதுவும் விரைந்து அளிக்க கோரிக்கை விடுப்போம். நமது நோக்கம் அரசினை நமது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு நமது பணிநியமனத்தினை நமக்கே உறுதிபடுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஒவ்வொருவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
அனைவரும் வருக! ஆதரவு தருக!
இப்படிக்கு,
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (SC&SCA மற்றும் பிரமலை-கள்ளர்) இடைநிலை ஆசிரியர்கள்,
தமிழ்நாடு.
ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்
Deleteதொடர்புக்கு :-
ஜெகநாதன் மதுரை – 9442880680
ஹரிகிருஷ்ணன் ராமநாதபுரம் –
மதன்பாண்டி மதுரை- 9865966398, 9629954949
ரமேஷ் நாமக்கல்-9942015830
சிவபிரகாஷ் கோவை –7708058814
பழனி திருவண்ணாமலை-9524805873
வீதியில் இறங்காமல் எதுவும் விடிய போவதில்லை. ஒன்று கூடுவோம் நமக்கானா உரிமையை வென்றெடுப்போம் நண்பர்களே.!!!
ReplyDeleteஆம் நண்பர்களே நமக்கான உரிய தெளிவான பதில் அரசு தரப்பில் இருந்து கிடைக்கும் வரையும் மற்றும் நமது பணியிடங்களை விரைந்து முடிக்க கோரியும் தொடர் போராட்டம் நடத்துவோம் .ஒன்றிணைவோம் வாருங்கள் நண்பர்களே .
ReplyDeleteஆம் நண்பர்களே நமக்கான உரிய தெளிவான பதில் அரசு தரப்பில் இருந்து கிடைக்கும் வரையும் மற்றும் நமது பணியிடங்களை விரைந்து முடிக்க கோரியும் தொடர் போராட்டம் நடத்துவோம் .ஒன்றிணைவோம் வாருங்கள் நண்பர்களே .
ReplyDeleteஆம் நண்பர்களே நமக்கான உரிய தெளிவான பதில் அரசு தரப்பில் இருந்து கிடைக்கும் வரையும் மற்றும் நமது பணியிடங்களை விரைந்து முடிக்க கோரியும் தொடர் போராட்டம் நடத்துவோம் .ஒன்றிணைவோம் வாருங்கள் நண்பர்களே .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks
ReplyDelete