மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2015

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் யு.ஜி.சி.விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து கல்யாணி மதிவாணன் நியமனத்துக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்தது. தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்தசுப்ரீம் கோர்ட்டு, 2010–ம் ஆண்டு யு.ஜி.சி. கொண்டு வந்த விதிமுறைகள் சட்டம் ஆகவில்லை. எனவே, கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும் என்று கூறி மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்தது. அவர் தொடர்ந்து துணை வேந்தராக நீடிக்கலாம் என்று தீர்ப்பு கூறியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி