வரும் கல்வியாண்டில், கிராமப்புற அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:
பள்ளிகளின் சிறப்புகளை முதன்மைப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவைதவிர, இடைநிலை வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பள்ளியின் மீதான விருப்பத்தை அதிகரிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டு, வரும் கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.தங்களின் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை ஆசிரியர்கள் முக்கியப்பணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.கிராமப்புற பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு உத்தரவு வழங்கவும்திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி