சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூடியது பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2015

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூடியது பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை


தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

அமைச்சரவை கூட்டம்
தமிழக சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் பிப்ரவரி 17–ந் தேதி தொடங்கியது. அன்று கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்தினார். அந்தசட்டசபை கூட்டத்தொடர் முடிவு பெறவில்லை. தேதி குறிப்பிடப்படாமல் அவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, பிப்ரவரி 6–ந் தேதி முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு, கவர்னர் உரை பற்றி ஆலோசிக்கப்பட்டது.இந்த நிலையில், தமிழக அரசின் 2015–2016–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இம்மாதம் இறுதியில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்படும். பின்னர் ஒவ்வொரு துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.

பட்ஜெட் பற்றி ஆலோசனைஇந்த சூழ்நிலையில், தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று மாலை 3 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடந்தது. தொடர்ந்து 40நிமிடம் நடந்த கூட்டத்தில், நடப்பாண்டு பட்ஜெட் பற்றி ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.ஒவ்வொரு துறைகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது, எந்த துறைக்கு அதிக முன்னுரிமை அளிப்பது, தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அரசியல் ரீதியான விவகாரங்கள் ஆகியவை குறித்து அமைச்சரவை கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.அமைச்சர்கள் பங்கேற்புமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தூர்பாண்டியன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி