பத்தாம் வகுப்புக்கு நாளையும், மற்ற வகுப்புகளுக்கு, 22ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன. தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு, 23ம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்குகிறது.
ஜூன், 1ம் தேதி புதிய வகுப்புகள் துவங்கும்.பத்தாம் வகுப்புக்கு, கடந்த, 19ம் தேதி பொதுத் தேர்வு துவங்கியது. தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் தேர்வுகள் முடிந்துள்ளன. நாளை, சமூக அறிவியல் தேர்வுடன் பொது தேர்வு முடிகிறது.ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு, தேர்வுகள் நடந்து வருகின்றன. வரும், 22ம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிகின்றன. வரும், 23ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஆனால், ஒன்று முதல் ஐந்து வரையிலான தொடக்கப்பள்ளிகள் ஏப்ரல், 30ம் தேதி வரை இருக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன், 1ம் தேதி பள்ளிகளை திறக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி