பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின அல்லது மலை சாதி வகுப்பைச்சேர்ந்த பட்டப்படிப்புடன் பி.எட். முடித்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதுவதற்கு 40நாட்களுக்கு இலவச பயிற்சியை அளிக்க முடிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து இந்த இலவச பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அதன் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் நடத்த உள்ளார்.பயிற்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) நடத்தப்பட இருக்கிறது. இதில் சேர விரும்பும் பழங்குடியின அல்லது மலை சாதி வகுப்பை சேர்ந்த பி.எட். முடித்தவர்கள் சேரலாம். அவ்வாறு சேருவதற்கு விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பதிவு செய்ய 30–ந்தேதி கடைசி.பயிற்சி கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் அளிக்கப்பட உள்ளது.
இந்த மாவட்டங்களில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பயிற்சி பெறலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி