சிவில் நீதிபதி பணிக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் 15 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2013-2014-ம் ஆண்டுக்கான சிவில் நீதிபதி பணியில் அடங்கிய 162 காலியிடங்களை நிரப்புவதற்காக 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1, 2-ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
அதிலிருந்து 590 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 4 முதல் 11-ம் தேதி வரை நடத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து, 314 பேர் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 15 முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இதற்கான அழைப்பாணை விரைவு தபால் மூலம்அனுப்பப்பட்டுள்ளது.மேலும், மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்தும்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி