எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி 20-ல் தொடங்குகிறது: 40 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2015

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி 20-ல் தொடங்குகிறது: 40 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு


எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது. இப்பணியில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
கடைசி நாளன்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது. தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ,மாணவிகள் அனைத்து தேர்வுகளும் முடிந்துவிட்டமகிழ்ச்சியில் உற்சாக காணப்பட்டனர்.இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 20-ம் தேதி தொடங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் கூறுகையில், “விடைத்தாள் மதிப்பீட்டு பணி வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 75 மையங்களில் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகிறார்கள். ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அஞ்சல்துறை லாஜிஸ்டிக்ஸ்

தமிழகத்தில் நேற்றுடன் முடிவடைந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் விடைத்தாள்களைஅவற்றை மதிப்பிடும் மையங்களுக்கு அஞ்சல்துறையின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவு வெற்றிகரமாகக் கொண்டுபோய் சேர்த்துள்ளது.

அதிகாரி விளக்கம்

இது குறித்து தமிழக அஞ்சலக வட்டாரத் தலைமையக உயரதிகாரிகள் கூறும்போது, “முன்பெல்லாம், விடைத்தாள்கள் தபால் நிலையங்களுக்குக் கொண்டுவரப்படும்.இந்த ஆண்டிலிருந்து, நாங்களே எங்களது வாக னங்களைக் கொண்டு போய் 68 கல்விமாவட்டங்களிடமிருந்து, விடைத்தாள்களைப் பெற்று, உரிய இடத்தில் ‘டோர்டு டோர்’ முறையில் பட்டுவாடா செய்தோம்” என்றனர்.

1 comment:

  1. மதுரை உயர் நீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 முதல் 17.04.2015 வரை நமது ஆதிதிராவிடர் பள்ளி, நலத்துறை பள்ளிகளுக்கான பணி நியமனம் பற்றிய வழக்குகள் எதுவும் எதுவும் இடம்பெறவில்லை....

    வழக்கு எண் WP (MD ) 16547/2014 / WP (MD ) 17255 /2014
    நண்பர்கள் யாரேனும் இது பற்றி தெரிந்தால் பதிவிடுங்கள்.........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி