பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கம்ப்யூட்டர் காலத்தில் மக்களால் ஃபேஸ்புக் இல்லாமல் இருக்க முடியவில்லை. யாரையாவது சந்தித்தால் செல்போன் நம்பர், முகவரி கேட்பதற்கு முன்பு ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது நிலைமை. ஃபேஸ்புக் மூலம் தான் பலர் நண்பர்களோடு தொடர்பில் உள்ளனர்.
இந்நிலையில் பேஸ்புக் ஹலோ என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்துகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் ஃபேஸ்புக் நண்பர்களை அவர்களின் செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.உங்கள் செல்போனில் குறிப்பிட்ட ஃபேஸ்புக் நண்பரின் செல்போன் எண் இல்லாவிட்டாலும் கவலை இல்லை.
அந்த நபர் ஃபேஸ்புக்கில் செல்போன் எண்ணை குறிப்பிட்டிருந்தால் ஹலோ அப்ளிகேஷன் அங்கிருந்து எண்ணை எடுத்துக் கொள்ளும். ஃபேஸ்புக் மெசஞ்சர் குழு உருவாக்கியுள்ள இந்த ஹலோ அப்ளிகேஷன் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. உங்களுக்கு பிடிக்காத நபர் ஃபேஸ்புக் மூலம் அழைத்தால் அவரை நீங்கள் பிளாக்(block) செய்யும் வசதியும் உள்ளது.இது தவிர ஃபேஸ்புக் மூலம் பணம் அனுப்பும் வசதியையும் அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர சிறப்பாசிரியர்களின் குழப்பத்திற்கு ஓர் விளக்கம்...
ReplyDeleteஅன்பான பகுதிநேர சிறப்பாசிரியர்களே !
கடந்த ஆண்டுகளில் நமது தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சேர்மன் திரு.சோலை M ராஜா அவர்கள் தலைமையில் மாநில அமைப்பாளர் திரு.கு.சேசுராஜா, மாநில துணை அமைப்பாளர் திரு.ஆனந்தராஜ், மாநில செயலாளர் கோவை திரு. ராஜா தேவகாந்த், மாநில பொருளாளர் திரு.நாகை ஜான்சன், மாநில செய்தித் தொடர்பாளர் திரு.பொன்.சங்கர் ஆகியோரின் தொடர்ந்த சீரிய முயற்சியாலும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த முயற்சியாலும் ஊதிய உயர்வு, பணியிட மாற்றம், இ.சி.எஸ். ஊதியமுறை ஆகியவற்றை நிறைவேற்றித் தந்துள்ளது.
நமது இடுகைத்தளம் "www.tptsta.blogspot.in" அதாவது "தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் செய்திகள்", முகநூல் பக்கம் "www.facebook.com/tnpsta", முகநூல் குழு "திருப்பூர் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் குழு", வாட்ஸ் அப் செயலி "TPTSTA - NEWS", "TIRUPPUR TPTSTA" ஆகிய இந்த ஊடகங்களின் பணி கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களை கட்டி இழுத்து ஒருங்கிணைத்ததில் மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளது. ஒருங்கிணைந்த நமது சங்கத்தின் வளர்ச்சிக்கு ஊடகத்தின் சக்தி ஆதாரமானது.
எந்த ஒரு நிச்சயத் தகவலானாலும் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளமான "தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் செய்திகள்" -ல் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.
நமது மிக முக்கிய இலக்கான "பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றம் செய்து பணி நிரந்தரம் செய்தல்" மற்றும் "ஊதிய உயர்வுடன் முழுநேரப்பணி" ஆகியவை குறித்து தமிழக அரசிடம் கோரிக்கைகளை நமது சங்கத்தின் சார்பில் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழகஅரசு அவற்றைப் பரிசீலித்து ஆவன செய்ய முயற்சித்து வருகிறது.
இதுவரையிலும் நாம் சென்றுகொண்டிருக்கும் சரியான பாதையை கட்டிக்காத்து வெற்றியை ஈட்ட வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
சங்கத்தின் சீரிய முயற்சியால் அரசின் நன்மதிப்பை நாம் பெற்றுள்ளோம். எனவே, நிச்சயமாக விரைவில் நல்ல செய்தியை தமிழக அரசு அறிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
இணைந்திருங்கள்.
ஒற்றுமை காப்போம் ! வெற்றி நமதே !
பொன். சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்