சத்துணவை ருசி பார்த்து வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2015

சத்துணவை ருசி பார்த்து வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு?


சத்துணவு பணியாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்ஈடுபட்டுள்ள நிலையில், 'பள்ளி சத்துணவை, தலைமை ஆசிரியர், சாப்பிட்டு பார்த்த பின்பே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்' என, கண்டிப்பான உத்தரவிடப்பட்டு உள்ளது.
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல், கால வரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், சத்துணவு ஊழியர் சங்கம்ஈடுபட்டு உள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் சத்துணவு வழங்குவது பாதிக்கப்படாமல் இருக்க, கல்வித்துறை, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதன் விவரம்:

* சத்துணவு ஊழியர் வராமல் இருக்கும் பட்சத்தில், தலைமை ஆசிரியர் உடனடியாக, தற்காலிக ஊழியர்களை தயார் செய்து, சத்துணவு வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், சத்துணவு தயாரான பின், அவற்றை சாப்பிட்டு பார்த்த பின்பே, பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும்.
* சத்துணவு உரிய நேரத்துக்கு முன்பே தயார் செய்து விட வேண்டும்; எக்காரணம் கொண்டும் தாமதம் செய்யக்கூடாது.
* பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுவது, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு. அதில் புகார் எழுந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி