மூடப்படுகிறது 'பிளிப்கார்ட்' வெப்சைட்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2015

மூடப்படுகிறது 'பிளிப்கார்ட்' வெப்சைட்!


அண்மையில், பிரபல ஷாப்பிங் வெப்சைட்டான 'மிந்த்ரா' மூடப்பட்டதையடுத்து ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் பிரபல 'பிளிப்கார்ட்' வெப்சைட்டும் இந்த ஆண்டுக்குள் மூடப்படுகிறது.
தொடர்ந்து பிளிப்கார்ட் இணையதளத்தில் ஊகவணிகங்கள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் வெப்சைட்டின் துணை அதிபர் மைக்கேல் அதானி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் 3-வது மிகப்பெரிய ஷாப்பிங் சைட்டாக உள்ள பிளிப்கார்ட்டுக்கு 4 கோடிக்கு அதிகமான பதிவு செய்த வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மொபைல்ஆப்ஸ் வழியாக இதுவரை 20 கோடிக்கும் அதிகமான பொருட்களை 30 ஆயிரம் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்திருக்கிறது பிளிப்கார்ட்.

இந்தியாவில் மட்டும் 24 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் கிடைப்பதாக பொதுவான கருத்து நிலவி வருகிறது.இந்நிலையில், அதிகரித்து வரும் ஷாப்பிங் காரணமாக வெப்சைட்டில் டிராபிக் அதிகமாகி அடிக்கடி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 10 மடங்கு ஆன்லைன் டிராபிக் அதிகரித்துள்ளது. இந்த சவாலை சமாளிக்க மொபைல் ஆப்ஸ் வழியாக பிரத்யேக பிளாட்பார்மில் இனி வர்த்தகத்தை வழங்க முடிவு எடுத்துள்ளது. மாதத்திற்கு 8 கோடி ஆர்டர்களை வினியோகித்து வரும் பிளிப்கார்ட்டுக்கு 3-ல் 2 பங்கு ஆன்லைன் டிராபிக் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து மட்டுமே வருகிறது.

மிந்த்ராவின் மொபைல் ஆப்ஸ் வளர்ச்சி பிளிப்கார்டை விட அதிகமானது. கடந்த ஆண்டு மிந்த்ராவை ரூ.2 ஆயிரம் கோடிக்கு கையகப்படுத்திய பிளிப்கார்ட் வரும் மே 1-ந்தேதி முதல் மொபைல் ஆப்ஸ் மூலமாக மட்டுமே வர்த்தகத்தை வழங்குகிறது. அதே பாணியை இனி பிளிப்கார்ட்டிலும் கடைபிடிக்க தயாராகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி