சத்துணவு ஊழியர் போராட்டம் கலை ஆசிரியர்கள் ஆதரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2015

சத்துணவு ஊழியர் போராட்டம் கலை ஆசிரியர்கள் ஆதரவு


சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கலைஆசிரியர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடந்தது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சாந்தகுமார் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்குஆதரவு தெரிவிக்கப்பட்டது. 'இப்போராட்டத்தால்,ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை கொடுக்க முடிவுசெய்துள்ள பள்ளி கல்வித் துறை, மாணவர்களுக்கு சமையல்செய்து சத்துணவு வழங்கும் பணியையும் ஆசிரியரிடமே ஒப்படைத்துள்ளது கண்டனத்திற்குரியது. முதல்வரும், பள்ளி கல்வித் துறையும், ஆசிரியர் அமைப்புகளையும், சத்துணவு ஊழியர்களையும் பேச்சுக்கு அழைத்து சுமுக தீர்வு காணவேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி