பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயில் சார்பில், மாணவர்களுக்கு மே மாத இறுதிவரை இலவசதமிழ்ப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.இதுதொடர்பாக ஆதிபுரீஸ்வரர் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:கோடை விடுமுறையில் மாணவர்கள் ஆன்மிகத் தகவல்களை முறைப்படி கற்கும் வகையில் பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயில் சார்பில் இலவச தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில் ஆத்திச்சூடி, நல்வழி, ஒüவையார் பாடல்கள், சங்கு நாத பயிற்சி உள்ளிட்டவற்றுடன் பரத நாட்டிய பயிற்சியும் அளிக்கப்படும்.மே மாத இறுதி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.காலை 9 மணி முதல் 11 மணி வரை தமிழ் பயிற்சியும், மாலை 5 மணி முதல் இரவு 7மணி வரை பரத நாட்டிய பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருள், சிற்றுண்டி, நோட்டுகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி