கல்வித்துறை உத்தரவு: பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2015

கல்வித்துறை உத்தரவு: பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் பிளஸ் 2 வகுப்புகளுக்குமார்ச் 5ம் தேதி தொடங்கியது.
பத்தாம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கியது. மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்கின. இந்நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் கடந்த வாரமே ேதர்வுகள் முடிந்த நிலையில் சில பள்ளிகள் நேற்று வரை தேர்வு நடத்தியது. இந்த கல்வியாண்டுக்கான இறுதி நாள் ஏப்ரல் 30ம் தேதி வரை உள்ளது. அதனால் சில பள்ளிகள் 30ம் தேதி வரை பள்ளியை நடத்த முடிவு செய்துள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 23ம் தேதி முதல் விடுமுறை விடலாம் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை அடுத்து அரசுப் பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளி திறக்கப்படும் நாளில் புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி