10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2015

10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது


எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

சென்னை டிபிஐ வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவராஜன், தேர்வுமுடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிடுகிறார்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை

www.tnresults.nic.in ,
www.dge.tn.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in

ஆகிய இணையதள முகவரிகளில் மதிப்பெண் விவரங்களுடன் அறிந்துகொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 29-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும். இதற்கிடையே, மறுகூட்டலுக்கு மே 22 முதல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் இறுதியில் சிறப்பு உடனடி துணைத்தேர்வு நடத்தப்படும். இதற்கு மே 22 முதல் 27-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி