10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நிறைவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2015

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நிறைவு


பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நேற்றுடன் முடிந்தது; மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி துவங்கியது.10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ல் துவங்கி, ஏப்., 10ல் முடிந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 11,827 பள்ளிகளில் இருந்து, 10.72 லட்சம் பேர் எழுதினர்.விடைத்தாள் திருத்தம், ஏப்., 20ம் தேதி, மாநிலம் முழுவதும், 73மையங்களில் துவங்கியது. முக்கியப் பாடங்களின் விடைத்தாள்கள், 25ம் தேதியுடன் திருத்தி முடிக்கப்பட்டன; மொழிப்பாடங்கள், 28ம் தேதி வரை திருத்தப்பட்டன.இதையடுத்து, விடை திருத்த மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோரின் சரிபார்ப்பு பணி, நேற்றுடன் முடிந்து, மதிப்பெண் பட்டியல் 'சிடி'க்களாக, தேர்வுத் துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.இன்று முதல், மாநில தகவல் தொகுப்பு மையம் மூலம், மதிப்பெண் தொகுப்பு மற்றும் சான்றிதழ் தயாரிப்புப் பணி துவங்க உள்ளது. வரும் 21ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி