அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் 18-ம் தேதி முதல் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2015

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் 18-ம் தேதி முதல் விநியோகம்


2015-2016-ஆம் கல்வியாண்டில், முதலாமாண்டு பட்டயப் படிப்பில் (டிப்ளோமா) சேருவதற்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) நடைபெறும் முதலாமாண்டு பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடைபெறும் பகுதிநேர பட்டயப் படிப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் 41 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 18.5.2015 முதல் 05.06.2015 முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.தொழிற்படிப்பு இடையே புகுத்தப்பட்ட பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களும்அத்தகைய படிப்பு நடத்தப்படும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மேற்குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்படும்.

மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை மே மாதம் 18-ஆம் தேதி முதல் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.150/-. நேரில் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ.150/-ஐ ரொக்கமாகச் செலுத்தியும், அஞ்சல் மூலம் பெறவிரும்புவோர் ரூ.150/-க்கான கோடிட்ட வங்கி கேட்பு வரைவோலையினை சம்பந்தப்பட்ட "முதல்வர்" பெயரில் எடுத்து, சுயவிலாசமிட்ட 30 செ.மீ.X2.5 செ.மீ. அளவுள்ள உறையில் ரூ.15/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல்/பழங்குடி இனத்தவருக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அவர்கள் சாதிச் சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகலைச் சமர்ப்பித்து விண்ணப்பத்தினை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தினை www.tndte.com என்ற இணையதளத்திலிருந்தும் மே மாதம் 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் 05.06.2015 ஆகும். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி