ஜூன் முதல் வாரத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2015

ஜூன் முதல் வாரத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு


நடந்து முடிந்த, பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு, ஜூன் முதல் வாரத்தில் சிறப்பு துணைத் தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.நடப்பு கல்வியாண்டில், அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்து, வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. 10ம் வகுப்புத் தேர்வு முடிவு, மே 21ல் வெளியாகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஐந்து முதல், 10 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். பள்ளிக்கு ஒழுங்காக வராதது; தேர்வில் பங்கேற்காதது;பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டும், தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வு நடத்தி, அதன் முடிவுகளின் படி, அடுத்த பிளஸ் 2 வகுப்புக்கு அவர்களை உயர்த்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. சென்னையில், ஜூன் 4ம் தேதி துணைத் தேர்வு துவங்க உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி