டி.என்.பி.எஸ்.பி.சி. குரூப் 2 தேர்வு எழுத விரும்புவோர் இலவச பயிற்சிக்கு அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2015

டி.என்.பி.எஸ்.பி.சி. குரூப் 2 தேர்வு எழுத விரும்புவோர் இலவச பயிற்சிக்கு அழைப்பு.


டி.என்.பி.எஸ்.பி.சி., குரூப் 2 தேர்வு எழுத விரும்புவோர் இலவச பயிற்சிக்கு பெயர் பதிய அழைக்கப்பட்டுள்ளனர்.டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 4, மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்றோர்களில் பலர் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் டைப்பிஸ்ட்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.

இதன்தொடர்ச்சியாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் வரும் ஜூலை 26 ல், நடக்கவுள்ள குரூப் 2 தேர்வுக்கு மே 15 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் செவ்வாய் முதல் சனிக்கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு 04567 221 160 என்ற தொலைபேசி எண்ணிலும், 86086 82791 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர்நந்தக்குமார் தெரிவித்தார்.

2 comments:

  1. PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
    உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

    முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!

    அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.

    சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
    எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.

    இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 50 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    தற்போது....

    அலகு 6 -சங்கம்- பாட்டும் தொகையும்-சங இலக்கிய சிறப்புகள்-அரசர்கள்-புலவர்கள் பகுதிக்கான விரிவான பயிற்சி, நினைவுக்குறிப்புகள், தேர்வு - தேர்வுக்கு பிந்தய பின்னூட்டம் ஆகியவை நிறைவுற்றுள்ளது

    (வினாத்தாள் 1 வெளியிடப்பட்டுள்ளது)

    (05.05.2015) முதல் அலகு 7 க்கான பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகின்றது
    நீங்களும் இணையுங்கள்
    கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
    வெற்றி- 7598299935

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி