பி.இ., - பி.டெக்., விண்ணப்பம் வினியோகம் நாளை துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2015

பி.இ., - பி.டெக்., விண்ணப்பம் வினியோகம் நாளை துவக்கம்


தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம், நாளை முதல், 60 மையங்களில் வினியோகம் செய்யப்படுகிறது.
அண்ணா பல்கலையில், 20 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பம் வழங்குவதற்கானஅதிகாரப்பூர்வ அறிவிக்கையை, அண்ணா பல்கலை நேற்று வெளியிட்டது. தமிழகம் முழுவதும், மொத்தம், 60 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.59 மையங்களில், வரும், 27ம் தேதி வரையிலும், அண்ணா பல்கலை வளாகத்தில் மட்டும், 29ம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள், 29ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் பெறப்படும்.அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு தவிர, மற்ற எல்லா நாட்களிலும், காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி