டிசம்பரில் சட்டசபை தேர்தல்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2015

டிசம்பரில் சட்டசபை தேர்தல்?

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
எம்.எல்.ஏ., பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அடுத்த 6 மாதத்திற்குள் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.இதற்காக அக்டோபரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். தமிழக சட்டசபையின் நடப்பு பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, அக்டோபரில்ஒரு இடைத்தேர்தல், மே மாதத்தில் பொதுத்தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், ஒரேடியாக அக்டோபரில்சட்டசபை கலைக்கப்பட்டு டிசம்பரில் பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி