மூளை சாவு ஏற்பட்ட பெண் ஆண் குழந்தையைப் பரசவித்த அதிசயம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2015

மூளை சாவு ஏற்பட்ட பெண் ஆண் குழந்தையைப் பரசவித்த அதிசயம்!!!

நெடுநாட்கள் பாதுகாத்து வந்த மருத்துவர்கள் 

இரு மாதங்களில் பிரசவிக்க இருந்த கர்லா பெரேஸுக்கு மூளை சாவு ஏற்பட்டது. அதன் பிறகும் கூட அவர் கர்ப்பமாக இருக்கிறார், இன்னும் சிறுது காலம் இவரை உயிருடன் பாதுகாத்தல் அந்த சிசுவிற்கு வாழ்வளிக்க முடியும் என்று 54 நாட்கள் மூளை சாவு ஏற்பட்ட கர்லா பெரேஸாவை பாதுகாத்து 


நூறு மருத்துவர்கள்

 இந்த அறுவை சிகிச்சை மற்றும் கர்லா பெரேஸாவை பாதுகாக்க நூறு மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர்.

9வது மாதத்தில் பிரசவம் 

குழந்தையின் நலன் கருதி 9வது மாதத்திலேயே அறுவை சிகிச்சையின் பிரசவிக்கப்பட்டது. இல்லையேல் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதியதால் முன்னதாகவே பிரசவம் செய்ததாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

தேவதை

கர்லா பெரேஸாவிற்கு பிறந்த குழந்தைக்கு தேவதை (Angel) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த குழந்தை பிறந்த போது வெறும் 0.9 கிலோ எடை தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூளையில் இரத்த கசிவு 

கர்லா பெரேஸாவிற்கு கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், பின் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதாக அறிவித்துள்ளனர்.


இறந்தும் நான்கு உயிரை காத்த கர்லா பெரேஸ் 

கர்லா பெரேஸ் எனும் இந்த இளம் தாய், குழந்தை பிறந்தஓரிரு நாட்களில் இறந்துவிட்டார். இறந்தும் கூட தனது குழந்தை உட்பட மூன்று பேருக்கு உயிரளித்துள்ளார்.

உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம் முறைப்படி, கர்லா பெரேஸாவின் உடல் உறுப்பைக் கொண்டு மூன்று நபர்கள் இன்று உயிருடன் வாழ்ந்து வருகின்றனர்.

தீவிர சிகிச்சையில் இருக்கும் தேவதை

மிகவும் சிரமப்பட்டு பிரசவிக்கப்பட்ட கர்லா பெரேஸின் தேவதை (குழந்தை), இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருக்கிறார். உடல் எடை அதிகரிக்க வேண்டும் மற்றும் உடல்திறன் மேம்பட வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

இதற்கு முன்.. 

இதே போல கடந்த 1999ஆம் ஆண்டு ஓர் பெண் மூளை சாவி ஏற்பட்ட பிறகு குழந்தை பிரசவித்ததாக அமெரிக்க நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி