பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2015

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

'அரசுப் பள்ளிகளில் 4,360 ஆய்வக உதவியாளர் நியமனத்தை சர்ச்சையின்றி, நேர்மையாக நடத்த வேண்டும்' என முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை நியமிப்பதற்கான எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது.

இதற்கான விண்ணப்ப வினியோகம் ஏப்.,24ல் துவங்கியது; விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு தேர்வு நடப்பதால் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.இதற்கிடையே, தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் வீட்டின் அருகிலேயே உள்ள பள்ளியில் பணி வாங்கித் தருவதாக, அரசியல்வாதிகள் சிலர் வசூல் வேட்டையில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கும் புகார் சென்றுள்ளது. 'இதனால் சர்ச்சை இன்றி தேர்வு நடத்த வேண்டும்' என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 150 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். இதில் 120 வினாக்கள் அறிவியல் பாடம்; 30 வினாக்கள் பொது அறிவு பகுதி யில் இருந்து இடம் பெறும். தேர்வு பெறுவோரில் ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் நேர்முகத் தேர்விற்கு (25 மதிப்பெண்) அழைக்கப்படுவர்.வேலைவாய்ப்பக பதிவு மூப்பிற்கு 10 மதிப்பெண், பிளஸ் 2 தேர்ச்சிக்கு 2, டிகிரிக்கு 3, பணி அனுபவத்திற்கு 2, கேட்கப்படும் கேள்விகளுக்கு 8 என மதிப்பெண் வழங்கப்படும். இதில் சிபாரிசுக்கு இடம் தராமல் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றார்.

22 comments:

  1. பெர்னாட்ஷா கண்ட வெற்றிக்கான சூத்திரம்....


    நான் இளைஞனாக இருந்தபோது பத்து காரியங்கள்செய்தால் அதில் ஒன்பது தோல்வி அடைவதைப்பார்த்தேன்.என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைவதைநான் விரும்பவில்லை. ஒன்பது தடவைவெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது, எனக்கு ஓர் உண்மைபளிச்சென்றுவிளங்கியது.தொண்ணூறு முறை முயன்றால் ஒன்பது தடவை வெற்றிகிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டேன்''- பெர்னாட்ஷா.

    ReplyDelete
    Replies
    1. முயற்சி தவறலாம் முயற்சிக்க தவறாதே! வாழ்த்துக்கள்

      Delete
    2. PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
      உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

      முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

      முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!

      அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
      முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.

      சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
      எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.

      இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 50 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

      தற்போது....

      அலகு 6 -சங்கம்- பாட்டும் தொகையும்-சங இலக்கிய சிறப்புகள்-அரசர்கள்-புலவர்கள் பகுதிக்கான விரிவான பயிற்சி, நினைவுக்குறிப்புகள், தேர்வு - தேர்வுக்கு பிந்தய பின்னூட்டம் ஆகியவை நிறைவுற்றுள்ளது

      (வினாத்தாள் 1 வெளியிடப்பட்டுள்ளது)

      (05.05.2015) முதல் அலகு 7 க்கான பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகின்றது
      நீங்களும் இணையுங்கள்
      கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
      வெற்றி- 7598299935

      Delete
    3. தமிழ்த்தாமரை
      தருமபுரி
      7598299935
      முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2015
      வினாத்தாள் 1-1

      1 “தொல்லாணை நல்லாசிரியர் புணர்க்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
      நிலந்தரு திருவின் நெடியோன்’ என சங்கம் பற்றி கூறுபவர்
      A.திருநாவுக்காசர் B. நல்லந்துவன்
      C. மாங்குடி மருதனார் D .நக்கீரர்
      2 வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்று இலமே முனிவின் இன்னாது என்றலும் இலமே”
      எனப்பாடியவர்
      A. பரணர் B. கடலுள் மாய்ந்த இளம்வழுதி
      C. கனியன் பூங்குன்றனார் D .ஒளவையார்
      3.கீழ்கண்ட எட்டுத்தொகை நூலில் காலத்தால் பிந்தையது
      A. பரிபாடல் B. நற்றிணை
      C.அகநானூறு D.புறநானூறு
      4. பாலைக்லியைப் பாடிய புலவர்
      A. ஒதலாந்தையார் B. பெருங்கடுங்கோ
      C .பேயனார் D.சோழன் நல்லுருத்திரன்
      5 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் உடைய எட்டுத்தொகை நூல்
      A. குறுந்தொகை B. நற்றிணை C.அகநானூறு D கலித்தொகை
      6. குறிஞ்சித்திணையில் அமைந்த ஐங்குறு நூற்றுப் பாடல்கள் எண்ணிக்கை
      A.29 B. 100 C.35
      D.17
      7..அகம் பாட சிறந்தது என தொல்காப்பியர் சுட்டிய பாவகையால் அமைந்த நூல்
      A. ஐங்குறுநூறு B. நற்றிணை C.அகநானூறு D கலித்தொகை
      8 .இரும்புக்கடலை என்று அழைக்கப்படும் சங்க நூல்
      A. பதிற்றுப்பத்து B. பரிபாடல் C.அகநானூறு
      D புறநானூறு
      9 .நன்றா என்ற குன்றிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவுப்பகுதியைப்
      கபிலருக்கு பரிசாக அளித்தவர்
      A. பாரி B.
      ஆடுகோட்பாட் சேரலாதன் C.இளஞ்சேரல் இரும்பொறை
      D .செல்வக்கடுங்கோ வாழியாதன்
      10.வெள்ளிவீதியார் பாடிய 8 பாடல்கள் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்
      A. குறுந்தொகை B. நற்றிணை C.அகநானூறு D.ஐங்குறுநூறு
      11. .சில்வளை விறளி”, ‘மரம்படு தீங்கனி’ எனும் தலைப்புகளில் பாடல் பாடிய புலவர்
      A. கபிலர் B. காக்கைப்
      பாடினியார் நச்செள்ளையார் C பரணர்
      D அரிசில் கிழார்
      12. உமனர் உப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஒழுகையாகச் செல்லும் காட்சியைக்
      கூறும் நூல்
      A. குறுந்தொகை B. நற்றிணை C.அகநானூறு D.ஐங்குறுநூறு
      13. வெண்கோட்டு யானை விறல் பூக் குட்டுவனுடைய துறைமுகம்
      A. கொற்கை B. காவிரிப்பூம்பட்டிணம் C.உறையூர் D தொண்டி
      14. “ திருமருது ஓங்கிய வியன் மரக் கா” - எது?
      A. முசிறி B .மதுரை C .வஞ்சி
      D .மருங்கூர்ப் பட்டிணம்
      15. இரந்துண்டு வாழும் பாணர்
      A .யாழ்ப்பாணர் B. இசைப்பாணர்
      C.மண்டைப்பாணர் D இவர்களூள் யாரும் இல்லை
      16 . சமுதாயப்பாட்டு என அழைக்கப்படும் நூல்
      A. சிறுபாணாற்றுப்படை B. பொருநராற்றுப்படை
      C. திருமுருகாற்ற்ப்படை D பெரும்பாணாற்றுப்படை
      17 .5 அடிகளில் அகத்துறைசெய்திக்களைக் கூறி எஞ்சிய அடிகளில்புறப்பொருள்
      செய்திகளை மிகுதியாகக் கூறும் நூல்
      A. முல்லைப்பாட்டு B. பட்டினப்பாலை
      C.குறிஞ்ச்சிப்பாட்டு D.மலைபடுகடாம்
      18.நெடுநல் வாடையினை புறப்பாட்டு என்றவர்
      A. கதிரேசஞ்செட்டியார் B. நச்சினார்க்கினியர்
      C .உ.வே.சா D.கவிமணி
      19.மலையில் பட்டு எதிரொலிப்பதால் ஏற்படும் 20 வகையான ஒலிகளைக் காட்டும்
      பத்துப்பாட்டு நூல்
      A. கூத்தராற்றுப்படை B. குறிஞ்சிப்பாட்டு
      C.நெஞ்சாற்றுப்படை D.திருமுருகாற்றுப்படை

      Delete
  2. what about adw list?

    ReplyDelete
  3. lap assistant exam questions 10 th science only or 6 th to 10 th science please clarify sir

    ReplyDelete
  4. ஆய்வக உதவியாளர் பணி வாங்கித்தருவதாக கூறி எங்கள் பக்கத்து ஊரில் பலர் உலாவிக்கொண்டு உள்ளார்கள்.அதில் இருவர் பிடிபட்டனர்.பொது மக்களே அடி உதை கொடுத்து பணத்தை மீட்டனர்.அவர்கள் ஏற்கனவே பல போட்டி தேர்வுகளுக்கு பணம் வாங்கி கொண்டு தலைமறைவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  5. Nanbargale
    tholviyai ninaithu bayapadamal
    vetriyai ninaithu kanavu kanamal
    unmaiyaga ulaiyungal
    vetri ungaluke
    vazhthukaludan

    ReplyDelete
  6. கொடுமை கொடுமைனு கோயிலுக்குபோனால் அங்க ஒரு கொடுமை அவுத்து போட்டு ஆடிச்சான்.

    ReplyDelete
  7. வாக்களிக்க பணம் கொடுக்கவி்ல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல் இதுவும் நிதர்சனமான உண்மை. மக்களுக்கு தெரியும்

    ReplyDelete
  8. Unmaiyana Ulaipay Uruthiyana Vetriyai Tharum....

    ReplyDelete
  9. Trb la irundha endha listum vara vaipu illai. Xam matume vara katayam vaipu ulladhaga thagaval kidaithadhu.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான வெற்றிக்கு உழைத்திட வாழ்த்துக்கள் மேலும் யாறும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

      Delete
    2. உண்மையான வெற்றிக்கு உழைத்திட வாழ்த்துக்கள் மேலும் யாறும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

      Delete
    3. Kandeepaga panam vilayadum.no doubt in that

      Delete
  10. ஆதி திராவிடர் பட்டியல் என்னாச்சு

    ReplyDelete
  11. adw list ennachu

    ReplyDelete
  12. adw list cutt off

    sc -?

    sca -?

    ReplyDelete
  13. adw list cutt off

    sc -?

    sca -?

    ReplyDelete
  14. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எந்த தேதியில் வரும் ?

    any news about adw list

    please inform kalvi seithi admin

    ReplyDelete
  15. அது சரி, கல்வித் துறை அதிகாரிகள் மட்டும் தான் பணம் வாங்க கூடாது, நேர்மையாக வழி நடத்த வேண்டும் ஆனால்.......................................
    செய்தியை கொஞ்சம் நம்புறமாதிரி போடுங்க.
    கூடிய விரைவில் பெரிய நிதி தேவைப்படும் என நினைக்கிறேன். என்னவோ போங்க. ஒரு
    25% வது உண்மையாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும். காலம் தான் பதில் சொல்லும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி