பள்ளிகள் மூலம் கட்டாயமாகிறது 'ஆதார்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2015

பள்ளிகள் மூலம் கட்டாயமாகிறது 'ஆதார்'


பள்ளிகள் மூலம், 'ஆதார்' எண் பதிவு செய்வதை, கட்டாயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 'ஆதார்' எண் உருவாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர், 'ஆதார்' எண் அளிக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.
இதுகுறித்து, 'ஆதார்' திட்ட இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் கூறியதாவது:

'ஆதார்' எண்ணை உருவாக்க, நிரந்தர மையம், பகுதி வாரியாக முகாம்கள் நடத்துவதோடு, சமூகத்தின் குறிப்பிட்ட பகுதியினருக்கு, 'ஆதார்' எண்ணை உருவாக்க, பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கும், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிலாளர் அதிகம் உள்ள அலுவலகங்களில், 'ஆதார்' எண் பதிவு செய்ய, சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. பள்ளிகள், கல்லூரிகளிலும் சிறப்பு முகாம் நடத்தத்திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரிடம், மாணவர் எண்ணிக்கை விவரம், அதில் ஆதார் எண் இல்லாதோரின் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டு உள்ளோம். இந்த, விவரங்களைப் பெற்றவுடன், பள்ளி, கல்லூரிகளில்சிறப்பு முகாம் நடத்தப்படும். நூறு சதவீத மக்களுக்கும், 'ஆதார்' எண் உருவாக்கவேண்டும் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களுக்கும், தனித் தனியாக, முகாம்கள் நடத்தப்படுகின்றன. 'ஆதார்' எண் அளித்தால் மட்டுமே, கல்வியைத் தொடர முடியும் என்ற, நிர்பந்தம் எதுவுமில்லை. 'ஆதார்' எண்ணை அடிப்படையாகக் கொண்டு, கல்வி சலுகைகள் அளிக்கப்படுவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி