தமிழக பாட திட்டம் தரம் உயர்கிறது: தேசிய புத்தகங்களுடன் ஒப்பிடும் பணி துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2015

தமிழக பாட திட்டம் தரம் உயர்கிறது: தேசிய புத்தகங்களுடன் ஒப்பிடும் பணி துவக்கம்


மத்திய பாடத்திட்டத்தின் படி, தமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்த தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முதற்கட்ட ஆய்வுப்பணி துவங்கி உள்ளது.

முதற்கட்ட பணி...:

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலாகியுள்ளது. இப்பாடத்திட்டப்படி, முப்பருவ முறை கற்பித்தல் மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது. இதேபோன்று, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, பாடத்திட்டத்தை மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு ஈடாக மாற்றியமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணி துவங்கி உள்ளது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி., மற்றும் தேசிய திறந்தவெளி பள்ளியான என்.ஐ.ஓ.எஸ்., ஆகிய பாடபுத்தகங்களுக்கு ஈடாக, தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது.தேசிய திறந்தவெளி பள்ளி பாட புத்தகங்களுடன், தமிழக பாடப்புத்தகங்களை ஒப்பிட்டு, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் முதற்கட்ட பணி நடந்து வருகிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், தமிழகம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், உருது, தெலுங்கு, கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பல பாடப்புத்தகங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

நிறை, குறைகள்:

எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், 10க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் தமிழகபள்ளிக்கல்வித்துறை மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, என்.சி.இ.ஆர்.டி.,யின் பாட புத்தகங்களும், தமிழகபாடப்புத்தகங்களுடன் ஒப்பிடப்படும். பின், தமிழக பாடப்புத்தகங்களின் நிறை, குறைகள் குறித்து விரிவான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய, எஸ்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி